வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

Sharing 3G Dongle Internet Connection

Posted by Thava சனி, 25 டிசம்பர், 2010 0 comments

# If you want to Share your Connection via Wi-Fi then you should have Wi-fi enabled computers.Please On Wi-Fi

1) First Insert your Dongle into one computer

2)

Allowing Dongle Connection to Share

a)(If Windows 7 ) Go to by Clicking on Control panel-----> Network and Sharing Center-->Change Adapter Setting

a)(If Windows xp ) Go to by Clicking on Control panel-----> Network Connection-->View Connections

b)Select on Your Dongle Connection name and Right Click On itClick on "Sharing" Tap

d)Tick only in "Allow other network users to connect through this computer's Internet connection" and tick off others. Also select Home Network which you would like to use (LAN/Wireless)

e)Click Ok(It will ask to confirm .you click on yes)

3)Now Connect Internet using your Dongle

4)Download the "Connectify" Software from

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

5)Install the software

6)Configer it by Clicking next

a)Give a Network Name which you want then Click next eg:thavanet

b)Give a good password then Click next eg: abcd8765

c)Select Your Shared Dongle Connection from List then Click next

d)Click Finish

Configer Conectify

Giving Hotspot Name

Selecting Shared Connection

7)A Small Window will Appear in Bottom Corner which will show the status and available other computers

Viewing Hotspot Information

8)In other Computer You Select your Network name from the list by clicking Wifi Icon eg: thavanet

9)Click on Connect.It will ask the password then give it which you already gave

10) Now You can Access the Internet

I will write it in tamil later

எதிர்காலம் நம் கையில்

Posted by Thava திங்கள், 20 செப்டம்பர், 2010 0 comments

- பத்ரி சேசாத்திரி . உதயன் நாளிதழ் 19-9-2010 -
(யாழ்பாணத்தில் நடைபெறும் கல்விகண்காட்சி சம்பந்தமான விளம்பர விவரணத்தில் இருந்து)

(-என்னைக் கவர்ந்ததால் இங்கே தருகிறேன் நான் 100 வீதம் நம்புகிறேன் பின்பற்றுகிறேன் - தவா)

எதிர்காலம் நம் கையில்
வளர்ந்த மேலைநாடுகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றன. சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வண்டிகள் வழுக்கிச் செல்கின்றன. வீடுகள் பெரும்பாலும் பார்க்க அழகாக இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய உணவு கிடைக்கின்றது. அவர்கள் நன்கு உண்டு, நன்கு வளர்ந்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடுகின்றனர். வீடுகளில் குழாயைத் திருகினால் நீர் கொட்டுகிறது.

பள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது. பொதுச்சுகாதார வசதிகள் எங்கும் கிடைக்கின்றன. சிறுசிறு ஊர்களிலும் மருத்துவமனைகள் உள்ளன. பலநாடுகளில் அரசு மருத்துவ வசதிகளைத் தருகிறது. பிற நாடுகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவுகளைச் சரிக்கட்ட முடிகிறது.

மனமகிழ்ச்சிக்கு என்று லட்சம் விஷயங்கள் உள்ளன. கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டமாகக் கலந்து கொள்கின்றனர். தொலைக்காட்சி பார்க்கின்றனர், புத்தகங்களை படிக்கின்றனர், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நம் நாடுகளில் நிலைமை அப்படியில்லையே? ஏழ்மை உள்ளது, படிப்பறிவின்மை உள்ளது. உணவுக்குத் திட்டாட்டம் உள்ளது, நாட்டின் உள்கட்டமைப்புகளில் எக்கச்சக்க குறைபாடுகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற பிரச்சனைகள். அடிப்படையில் எல்லாமே பணம் சார்ந்த பிரச்சனைகள் தான்.


இந்தப்பிரச்சனைகளைப் பற்றி ஆராய விருப்பமில்லாத பலரும், பேசாமல், நாம் வசதி படைத்த இந்த மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டால் என்ன என்று கூட யோசிக்கிறார்கள். நம் உறவினர்கள் பலரும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் இது ஒன்று தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வா? அப்படி எத்தனை பேர் தான் வேறு ஒரு நாட்டில் போய் வசித்துவிடமுடியும்? அப்படிப் போகமுடியாதவர்கள் காலாகாலத்துக்கும் ஏழ்மையில் சிக்கி மோசமான உள் கட்டமைப்புகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? முடிவான தெளிவான தீர்வு நம் நாட்டையே வளப்படுத்துவது தான் அல்லவா? அப்படித்தான் அந்த மேலைநாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் செய்துள்ளனர். அவர்கள் நாடும் ஏழ்மையில் உள்நாட்டுச் சிக்கல்களில் மோசமான உள்கட்டமைப்புகளில் எழன்ற ஒன்று தானே?
அவர்களால் தமது நாட்டை மீட்டெடுக்க முடிந்த போது, நம்மால் முடியாதா? முடியும் என்றால் எப்படி முடியும்?


என் கருத்தில் இந்த முடியும் என்ற மனப்பான்மையை நமக்குத் தருவது புத்தகங்களே. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் போது தான் பிறர் பட்டுள்ள துயரங்களும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டுள்ளனர். என்பதும் நமக்குத் தெரிகிறது.


அறிவியல், தொழில்நுட்பப் புத்தகங்களைப் படிக்கும் போது தான், நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு தீர்வுகளை எப்படி உருவாக்குவது என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தலைமைப் பண்பை, விடாமுயற்சியை, பொறுமையை, வீரத்தை மன உரத்தை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தே தெரிந்து கொள்கிறோம்.

நமக்குத் தேவையான நற்பண்புகளை, நற்செயல்களை, நல் அறத்தை பல புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கின்றோம். உலக மக்களை, அவர்களது கலாசாரத்தை, அவர்களது சாதனைகளை, அவர்களது போராட்டங்களை, அவர்களது உயிர்த்துடிப்பை அவர்களது இலக்கியப் புத்தகங்கள் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

நம் தமிழில், நம் மொழியில் இது போன்ற புத்தகங்களைக் கொண்டு வருவது தான் கிழக்குப் பதிப்பகத்தின் நோக்கம். அறிவார்ந்த நூல்களை அருமையான மொழிபெயர்ப்புகளை, உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் வாயிலாக நாங்கள் கொண்டு வருகிறோம். ப்ராடிஜி புக்ஸ் என்ற பதிப்பின் மூலம் இதே போன்ற புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். பள்ளி மாணவர்கள் தான் நாளைய உலகின் நம்பிக்கை என்பதை நாங்கள் தீர்மானமாக நம்புகின்றோம். நம் இலட்சியத்துக்கும் நம் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பது உண்மையே. ஆனால் இந்த உண்மையை யார் யார் நிரப்பப் போகிறார்கள்? நம் இளைய சமுதாயம் தான். அவர்களது நம்பிக்கைக்கு உரம் போட, அவர்களது அடங்காத ஆர்வத்துக்கு வழிகாட்ட எங்கள் புத்தகங்களால் முடிந்தது என்றால், நாங்கள் உள்ளார மகிழ்வோம். எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று சந்தோசப்படுவோம்.
உலகிலுள்ள முன்னேறிய நாடுகள் அனைத்துமே அறிவு வளர்ச்சி மூலமாகவே முன்னேறின. படிப்பறிவு தர பள்ளிக்கூடங்கள், அந்தப் பள்ளிக்கூடங்களில் எண்ணற்ற புத்தகங்கள், ஊரெங்கும் நூலகம், அந்த நூலகம் முழுக்க நிறைந்திருக்கும் அறிவுக் கருவூலங்கள், இவையே அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்குக் காரணங்கள். அதே காரணங்களை நாங்கள் அப்படியே நகல் எடுத்தாலே போதும். நம் நாட்டையும் உயர்த்திவிடலாம்.

இன்று தமிழ் செய்தி தளமொன்றில் யாழ்பாணத்தில் நடந்த ஒரு சமூகசீர்கேட்டு சம்பவம் தொடர்பாக காணொளியுடன் கூடிய செய்தி வெளிடப்பட்டிருக்கிறது

பேட்டி எடுப்பவரின் வினாக்களும் பணிப்புக்களும் விரசமாக உள்ளது. பெண்ணின் எதிர்காலத்துடன் விளையாடுவது நல்லதல்ல. ஒரு ஊடகவியலாளன் கேட்கக்கூடாதவற்றினை கேட்பதாக படுகிறது. வீடியோ நீக்கப்படவேண்டும்.பெண்ணிற்கு பாதுகாப்பு தருவதற்கே பேட்டி எடுப்பதாக கூறுபவர் எந்தவகையிலான பாதுகாப்பினை அளித்திருக்கிறார்? அதை

இணையத்தில் போட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாரா? குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா? பெண்கள் என்றால் எல்லோரும் இயலாதவர்களாக கருதி விட்டார்களா. உண்மைான ஊடகவியலாளன் குற்றவாளியையும் வீடியொவில் பேட்டி எடுத்திருப்பான் அதை விடுத்து அபலைப்பெண்னை அச்சுறுத்தி வீடியோ எடுப்பது ஊடகவியலாளர்களுக்கே அவமானம்

யாழ்பாணத்து பெண்கள் தங்கள் வாழ்க்கையினை பணயம் வைத்து ஒரு குற்றவாளியை இப்படி பிடிக்க ஒருபோதும் துணியமாட்டார்கள் என்பது எனது வாதம். அவர்கள் கோழைகள் அல்லர் ஆனால் அதற்கும் அவர்களிட்ம் ஒரு எல்லை உண்டு.சரி அந்தளவுக்கு பணயம் வைத்திருந்தால் நிச்சயம் பாராட்டுவேன் அதனை பொலிசுடன் இணைந்து செய்திருக்கலாம்

செய்தியை குற்றவாளி குறித்து மட்டும் மட்டுப்படுத்திருக்கலாம் ஆனால் அப்படிச்செய்யாமல் பெண்ணினது நடத்தை தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டிருப்பது நண்பர்கள் அவளுக்கு செய்த துரோகம் ஆகும்

விடியோவில் சந்தேகம் இருக்கிறது குரலும் அசைவும் ஒத்து வரவில்லை.இப் பெண் இயலாமையினால் அல்லது பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டால் தப்பிட பல வழிகள் இருந்திருக்கின்றன ஆனால் குளிக்கும் வரை சென்றிருப்பது சந்தேகத்தினை வலுப்படுத்துகிறது

கொஞ்சம் சிந்தித்தால் செய்தி குழப்பமாக இருக்கிறது.எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்

மற்றப்படி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளி அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டு்ம் இவ்வாறான சமூக சீ்ர்கேடுகள் ஒழிக்கப்படவேண்டும். அதனை ஊடகபிரபல்யத்திற்கு பாவிப்பது கூடாது பெண்போராளிகளின் ஒளிப்படம் ஒன்று முன்பு வெளிடப்பட்டவேளை சர்ச்சசையினை கிளப்பியிருந்தமை நாமறிந்ததே.



யாரை நோவது?

Posted by Thava வியாழன், 10 ஜூன், 2010 0 comments

எமது போராட்டம் கருணாநிதியை கேட்டு தொடங்கப்படவில்லை.கருணாநிதியையோ இந்தியாவையோ இல்லை ஒபாமாவையோ அல்லது பான்கிமூனையொ நம்பியோ தமிழர்களுக்கான இன விடுதலைப்பொராட்டம் தொடங்கப்படவில்லை.இலட்சியத்திற்காக முடிந்தவரை போராடி கடைசியில் இந்த நிலை

இதுவரை நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என சுயவாசிப்பு செய்தாலே போதும் சகலதுக்கும் விடை வெளிக்கும்.இன்று பலரும் இந்திய எதிர்ப்பு உலக எதிர்ப்பு கருத்துக்களை அள்ளிவீசுகின்றனர். அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்துதான் எமது போராட்டம் ஒடுக்கப்பட்டது.அதிலே எமது தரப்புக்கும் பங்குண்டு

எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது இனி சுயவிமர்சனம் செய்து பிழைகளை திருத்தி நடக்கவேண்டியவற்றினைப்பார்க்கவேண்டும். அதைவிடுத்து அறிக்ககைகள் ஆதங்கங்களை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதும் நாம் நல்லபடி விரும்பியபடி வாழ்ந்து கொண்டு அழிவுகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநியாயம். அவர்களின் விடிவுக்கு இனி எவ்வாறு உதவலாம் எவ்வாறு எமது அடையாளங்களையும் பிரதேசங்களையும் கட்டிஎழுப்பலாம் என்று யோசிக்கவேண்டும்


புதிய அறிவியல் உலகிற்கு எமது மக்கள் அனைவரையும் அழைத்துச்செல்ல என்னசெய்யலாம் எமது அரசியல் உரிமைகளை எப்படி நிலைநிறுத்தலாம் என சிந்திப்பதைவிடுத்து தொடந்து வசைபாடிக்கொண்டிருப்பதில் எந்தவித இலாபமும் இல்லை அதன்மூலம் எம்மை தேசியவாதிகளாக காட்டிக்கொ்டிரக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு நடிகர்கள் வரக்கூடாதென்று அங்கே தடுக்கிறர்கள் ஆனால் நாம் என்னசெய்கிறொம் அப்படி வந்த நிகழ்வுகளை புறக்கணித்தோமா இல்லையே தவறாமல் சென்று கூத்தாடினீர்களே? மகழ்ச்சி நிகழ்வுகளை நாம் நடா்த்தாமல் விட்டிருக்கிறோமா?

கனக்க வேண்டாம் சகலரும் சண் தொலைக்காட்சியை பார்காமல் தவிர்பீர்களா மக்கள் இங்க நோகிறாங்க உங்களுக்கு என்ன 20 20 கிரிக்கட் வேண்டிக்கிடக்கு.சும்மா ஒரு நடிகர் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரது படத்ததையே திரையிடவிடமாட்டோம் என குழு தொடங்கிறீங்க இப்படியே எல்லாத்தைதும் எமது போராட்டத்தின் ஒரு பரிணாமத்தின் முடிவுக்கு(பேிரச்சனை இருக்கும் வரை போராட்டம் முடியாது) காரணம்சொல்லி யாரையோ நொந்துகொண்டிருக்கிறோம்

துரையப்பா விளையாட்டரங்கில் துள்ளியாடுகிறார்கள். வெளிநாடுகளில் வெள்ளைகளுடன் விதம்விதமாய் ஆடுகிறார் எமது எதிர்காலத்துக்காய் என்னவெல்லாமோ செய்கிறோம் அந்த நொந்தமக்களை மீண்டுவர சந்தர்பம் கொடுக்கிறோமா மீண்டும் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலுக்குள் வைத்திருக்க உணர்ச்சி அரசியலை உசாத்துணைக்கு அழைக்கிறோம்.

அய்யோ வேண்டாம் அவர்களை விடுங்கள் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்கள் மனதளவில் நேர்மையாக இருக்கப்பாருங்கள் சகலரும் நம்நாட்டில் நம் இனத்திற்கு என்ன நடக்கிறது அதை எப்படி எதிர்கொள்ளலாம் நாம் சார்ந்த சமூகத்தின் ஊடாக நிறுவனங்களின் ஊடாக எவ்வாறு எமது நொந்த மக்களுக்கும் வெந்தபுண்களுக்கும் ஆறுதல் கூறலாம் நல்வழி காட்டலாம் இனிமேலும் அழிந்துபோவதை தடுக்க என்ன செய்யலாம் சிதைந்த அடையாளங்களையும் பொருண்மியங்களையும் எவ்வாறு துாக்கி நிமித்தலாம் என சிந்தித்தால் செயற்பட்டால் விடிவு வெகுதுாரத்தில் இல்லை அதை விடுத்து அவனாலதான் கெட்டன் இவனாலதான் கெட்டன் என்று புலம்புவதில் பலனில்லை.

மற்றைவனை நம்பியவன் எல்லாம் வெற்றிபெற்றதாய் சரித்திரம் இல்லை


-தவா

எமது போராட்டம் கருணாநிதியை கேட்டு தொடங்கப்படவில்லை.கருணாநிதியையோ இந்தியாவையோ இல்லை ஒபாமாவையோ அல்லது பான்கிமூனையொ நம்பியோ தமிழர்களுக்கான இன விடுதலைப்பொராட்டம் தொடங்கப்படவில்லை.இலட்சியத்திற்காக முடிந்தவரை போராடி கடைசியில் இந்த நிலை

இதுவரை நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என சுயவாசிப்பு செய்தாலே போதும் சகலதுக்கும் விடை வெளிக்கும்.இன்று பலரும் இந்திய எதிர்ப்பு உலக எதிர்ப்பு கருத்துக்களை அள்ளிவீசுகின்றனர். அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்துதான் எமது போராட்டம் ஒடுக்கப்பட்டது.அதிலே எமது தரப்புக்கும் பங்குண்டு

எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது இனி சுயவிமர்சனம் செய்து பிழைகளை திருத்தி நடக்கவேண்டியவற்றினைப்பார்க்கவேண்டும். அதைவிடுத்து அறிக்ககைகள் ஆதங்கங்களை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதும் நாம் நல்லபடி விரும்பியபடி வாழ்ந்து கொண்டு அழிவுகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநியாயம். அவர்களின் விடிவுக்கு இனி எவ்வாறு உதவலாம் எவ்வாறு எமது அடையாளங்களையும் பிரதேசங்களையும் கட்டிஎழுப்பலாம் என்று யோசிக்கவேண்டும்


புதிய அறிவியல் உலகிற்கு எமது மக்கள் அனைவரையும் அழைத்துச்செல்ல என்னசெய்யலாம் எமது அரசியல் உரிமைகளை எப்படி நிலைநிறுத்தலாம் என சிந்திப்பதைவிடுத்து தொடந்து வசைபாடிக்கொண்டிருப்பதில் எந்தவித இலாபமும் இல்லை அதன்மூலம் எம்மை தேசியவாதிகளாக காட்டிக்கொண்டிரக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு நடிகர்கள் வரக்கூடாதென்று அங்கே தடுக்கிறார்கள் ஆனால் நாம் என்னசெய்கிறொம் அப்படி வந்த நிகழ்வுகளை புறக்கணித்தோமா இல்லையே தவறாமல் சென்று கூத்தாடினீர்களே? மகிழ்ச்சி நிகழ்வுகளை நாம் நடாத்தாமல் விட்டிருக்கிறோமா?

கனக்க வேண்டாம் சகலரும் சண் தொலைக்காட்சியை பார்காமல் தவிர்ப்பீர்களா மக்கள் இங்க நோகிறாங்க உங்களுக்கு என்ன 20 20 கிரிக்கட் வேண்டிக்கிடக்கு.?சும்மா ஒரு நடிகர் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரது படத்தையே திரையிடவிடமாட்டோம் என குழு தொடங்கிறீங்க இப்படியே எல்லாத்தையும் எமது போராட்டத்தின் ஒரு பரிணாமத்தின் முடிவுக்கு(பிரச்சனை இருக்கும் வரை போராட்டம் முடியாது) காரணம்சொல்லி யாரையோ நொந்துகொண்டிருக்கிறோம்

துரையப்பா விளையாட்டரங்கில் துள்ளியாடுகிறார்கள். வெளிநாடுகளில் வெள்ளைகளுடன் விதம்விதமாய் ஆடுகிறார் எமது எதிர்காலத்துக்காய் என்னவெல்லாமோ செய்கிறோம் அந்த நொந்த மக்களை மீண்டுவர சந்தர்பம் கொடுக்கிறோமா? மீண்டும் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலுக்குள் வைத்திருக்க உணர்ச்சி அரசியலை உசாத்துணைக்கு அழைக்கிறோம். 

அய்யோ வேண்டாம் அவர்களை விடுங்கள் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்கள் மனதளவில் நேர்மையாக இருக்கப்பாருங்கள் சகலரும் நம்நாட்டில் நம் இனத்திற்கு என்ன நடக்கிறது அதை எப்படி எதிர்கொள்ளலாம் நாம் சார்ந்த சமூகத்தின் ஊடாக நிறுவனங்களின் ஊடாக எவ்வாறு எமது நொந்த மக்களுக்கும் வெந்தபுண்களுக்கும் ஆறுதல் கூறலாம் நல்வழி காட்டலாம் இனிமேலும் அழிந்துபோவதை தடுக்க என்ன செய்யலாம் சிதைந்த அடையாளங்களையும் பொருண்மியங்களையும் எவ்வாறு துாக்கி நிமித்தலாம் என சிந்தித்தால் செயற்பட்டால் விடிவு வெகுதுாரத்தில் இல்லை அதை விடுத்து அவனாலதான் கெட்டன் இவனாலதான் கெட்டன் என்று புலம்புவதில் பலனில்லை.

மற்றைவனை நம்பியவன் எல்லாம் வெற்றிபெற்றதாய் சரித்திரம் இல்லை

நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் முகாமில் இருந்து விடுவிக்கப்பட மாணவர்களுக்கு நிதிசேகரிக்கவந்தனர்.அவர்களுடைய தற்போதைய சேவை வரவேற்கத்தக்கதே. தாம் பலரிடம் வேண்டியும் சரிவராதகாரணத்தினால் பல்கலைச்சமூகத்திடமே உதவிகேட்க வந்திருப்பதாக தமது வேண்டுகோள்கடிததத்தில் குறிப்பிட்டிருந்தனர்.இவர்களின் தன்னார்வ முயற்சியை மெச்சுகிறேன். அவ்வாறான செயற்பாடுகள் தொடரவேண்டும்.வெறுமனே பணஉதவி மட்டுமல்ல உளவியல் சரீர ரீதியான உதவிகளும் வழங்கலாம்

என்னால் ஆன பங்களிப்பினை நான் வழங்கினேன் . இவ்வேளை எனக்கு பழைய ஞாபங்கள் வந்து மின்னின.


பல்கலைமாணவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் குறிப்பாக யுத்த காலத்தில் எவ்வாறிருந்தன என்பதை நாம் அறிவோம் பொங்குதமிழ் நிகழ்விற்கு பின்னரான நடவடிக்ககைகள் எதுவும் பெரும்பாலும் வரவேற்கப்படக்கூடியதாக இருக்கவில்லை.

இங்கு ஒன்றை நான் குறிப்பிடவேண்டும் அச்சுறுத்தல் நிலவியதால் அவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போனது உண்மை ஆனால் கேளிக்கைகளை நிறுத்தியிருக்கலாம். இப்படிக்கூறுவதன் ஊடாக நான் அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கின்ற உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளை தியாகங்களை கொச்சைப்படுத்தமுடியாது. ஏன் அவர்கள் மே 18 கைலாசபதிகலையரங்கில் அமைதியான அஞ்சலி நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனா் இது வரவேற்கக்கூடிய நிகழ்வு. ஆயினும் அவர்கள் செய்த தவறுகளையும் மறுக்கமுடியாது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மாணவர் பிரிவுகள் செய்யும் நிகழ்வுகளுக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பது யாவரும் அறிந்தது எனவே நான் ஒன்றியத்தினைக்கேட்கவில்லை ஒட்டுமொத்த மாணவர்களையும் கேட்கிறேன்

தற்போது முகாம் மாணவர்கள் படிப்படியாக விடுவிக்கப்டுகின்றனர் எனவே தாம் (அல்லது மூத்த வெளியேறிய மாணவர்கள்) செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக இவ்வருடம் நடத்தவுள்ள கேளிக்கை நிகழ்வுகளை (கோயிங் டவுண்,வெல்கம் பார்ட்டி) நிறுத்திவைத்து அதற்கு செலவழிக்க மாணவர்களிடம் அவ்வப்பபோது அறவிடப்படப்போகின்ற பணநன்கொடைகளை சேமித்து அவ்வப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வரவார்களா? அப்படிச்செய்தால் இவர்களது இச்சேவை மேலும் புனிதமடையும்

யாழ் பல்கலைக்கழக மாணவரின் நிகழ்வுகள் தொடர்பாக அக்காலத்தில் உள்ளுர் பத்திரிகையில் காட்டமான கட்டுரை வெளிவந்திருந்தது.பலருக்குதெரியும்

அது தொடர்பாக எனது வலைப்பதிவில் கூட ஒருபதிவை இட்டிருந்தேன். கொத்தக்கொத்ததாக மக்கள் இறந்துகொண்டிருந்தவேளையிலும் கோயிங்டவுண் நிகழ்வுகளுக்கு கொலுசு கட்டிசென்றவர்களும் இன்று இங்கே Face book இல் எனது நண்பர்களாக இருக்கிறார்கள் நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.பிழையினை நண்பன்செய்தாலும் நான்செய்தாலும் பிழைதான். அதை உணர்ந்தால் அது வரவேற்கத்தக்கது.

புதியபாதையில் மாணவர்கள் தமது உறவுகளை அரவணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஓரளவுக்கு நிம்மதி தருகிறது

உலகத்தமிழ் இணைய மாநாடு 2010

Posted by Thava சனி, 6 மார்ச், 2010 0 comments

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டோடு இணைந்துஉத்தமம், தமிழ்நாடு, கோவையில் சூன் 23, 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 விளங்கும்.தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.


மேலதிக தகவல்களுக்கு http://www.infitt.org/
பதிவுகளுக்கு http://www.infitt.org/ti2010/register/

தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

முக்கிய நாட்கள் தங்களின் கவனத்திற்கு:
கட்டுரைச் சுருக்கத்தினை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள்: மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள்.
முடிவு உங்களுக்கு வரும் நாள்: மார்ச்சு மாதம் முப்பதாம் நாள்.
உங்களுடைய முழுக்கட்டுரைக்கான கடைசி நாள்:
ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாள்.