வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

கமெரா தூக்கினவன் எல்லாம் ஊடகவியலாளனா?

Posted by Thava திங்கள், 20 செப்டம்பர், 2010

இன்று தமிழ் செய்தி தளமொன்றில் யாழ்பாணத்தில் நடந்த ஒரு சமூகசீர்கேட்டு சம்பவம் தொடர்பாக காணொளியுடன் கூடிய செய்தி வெளிடப்பட்டிருக்கிறது

பேட்டி எடுப்பவரின் வினாக்களும் பணிப்புக்களும் விரசமாக உள்ளது. பெண்ணின் எதிர்காலத்துடன் விளையாடுவது நல்லதல்ல. ஒரு ஊடகவியலாளன் கேட்கக்கூடாதவற்றினை கேட்பதாக படுகிறது. வீடியோ நீக்கப்படவேண்டும்.பெண்ணிற்கு பாதுகாப்பு தருவதற்கே பேட்டி எடுப்பதாக கூறுபவர் எந்தவகையிலான பாதுகாப்பினை அளித்திருக்கிறார்? அதை

இணையத்தில் போட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாரா? குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா? பெண்கள் என்றால் எல்லோரும் இயலாதவர்களாக கருதி விட்டார்களா. உண்மைான ஊடகவியலாளன் குற்றவாளியையும் வீடியொவில் பேட்டி எடுத்திருப்பான் அதை விடுத்து அபலைப்பெண்னை அச்சுறுத்தி வீடியோ எடுப்பது ஊடகவியலாளர்களுக்கே அவமானம்

யாழ்பாணத்து பெண்கள் தங்கள் வாழ்க்கையினை பணயம் வைத்து ஒரு குற்றவாளியை இப்படி பிடிக்க ஒருபோதும் துணியமாட்டார்கள் என்பது எனது வாதம். அவர்கள் கோழைகள் அல்லர் ஆனால் அதற்கும் அவர்களிட்ம் ஒரு எல்லை உண்டு.சரி அந்தளவுக்கு பணயம் வைத்திருந்தால் நிச்சயம் பாராட்டுவேன் அதனை பொலிசுடன் இணைந்து செய்திருக்கலாம்

செய்தியை குற்றவாளி குறித்து மட்டும் மட்டுப்படுத்திருக்கலாம் ஆனால் அப்படிச்செய்யாமல் பெண்ணினது நடத்தை தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டிருப்பது நண்பர்கள் அவளுக்கு செய்த துரோகம் ஆகும்

விடியோவில் சந்தேகம் இருக்கிறது குரலும் அசைவும் ஒத்து வரவில்லை.இப் பெண் இயலாமையினால் அல்லது பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டால் தப்பிட பல வழிகள் இருந்திருக்கின்றன ஆனால் குளிக்கும் வரை சென்றிருப்பது சந்தேகத்தினை வலுப்படுத்துகிறது

கொஞ்சம் சிந்தித்தால் செய்தி குழப்பமாக இருக்கிறது.எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்

மற்றப்படி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளி அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டு்ம் இவ்வாறான சமூக சீ்ர்கேடுகள் ஒழிக்கப்படவேண்டும். அதனை ஊடகபிரபல்யத்திற்கு பாவிப்பது கூடாது பெண்போராளிகளின் ஒளிப்படம் ஒன்று முன்பு வெளிடப்பட்டவேளை சர்ச்சசையினை கிளப்பியிருந்தமை நாமறிந்ததே.



0 comments

கருத்துரையிடுக