வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்

Posted by Thava செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.

இப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே!

இன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல! சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.

மக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...

அரசியலில் கதைக்க ஆயிரம் இருக்கு!அதை செய்யுங்க! வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.

வெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை! பொறுத்தருளவும்.

0 comments

கருத்துரையிடுக