வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

கோயிங் டவுண்

Posted by Thava ஞாயிறு, 16 நவம்பர், 2008

நான் நினைப்பதுபோலவே எனது செயல்கள் போலவே என்னைச்சார்ந்தவர்களும் நான் நேசிக்கின்றவர்களும் நினைக்கவேண்டும் செய்யவேண்டும் என விரும்புவது நியாயமில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் சில நேரங்களில் இவற்றினை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதற்கு வடிகால் வலைப்பதிவு தான் போலும்.யாழ் பல்கலைக்கழகத்தில் ”கோயிங் டவுண்” மகிழ்வு கொண்டாட்ட நிகழ்வு சம்பந்தமான உரையாடல் என்னை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது நான் இப்படியான நிகழ்வுகளில் என்ன நடைபெற்றது என விலாவாரியாக விசாரிப்பதுண்டு அப்படி சென்று கொண்டிருந்த உரையாடல் ”இன்றும் மது அருந்தி கூத்தடித்தார்களா” என விரிந்தது ”ஆம்” இது பதில் ”இது எல்லாம் தேவைதானா பாடுங்கள் ஆடுங்கள் கதையுங்கள் சிரியுங்கள் அதைவிடவும் இப்படியான மது அடித்து கூத்தடிக்கும் போதையில் உழலும் நடவடிக்கைகளும் அவசியம்தானா? ஒருபகுதியினர் (விரிவுரையாளர்கள்) பார்த்திருக்க முடியாது செல்லும் அளவுக்கு நடைபெறும் இப்படியான நிகழ்வுகள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன ” என நீண்டு சென்றது எனது வாதம்.எதுவித பங்களிப்புமின்றி வெறும் பார்வையாளராகவே இருந்து விட்டு வந்த எனது எதிர்வாதி சொன்னது தான் என்னை பாதித்து விட்டது ”இது எனக்கு தப்பாகப்படவில்லை” என்று இச்செயல்களை நியாயப்படுத்துகிறார் இவர்.பார்ட்டி ஒன்று நடந்தால் எல்லாம் இருக்கும் என்று இவர் பார்டிகள் பற்றி எனக்கு படிப்பிக்கின்றார்.


இவ்வாறான நிகழ்வுகள் எந்த மரபுமுறைகளின் கீழ் முன்னெடுத்தச்செல்லப்படுகின்றன. பெற்றோரின் பணத்தில் இவர்களின் கூத்து எந்தவகையில் நியாயமாகமுடியும் மகழ்வுடன் உங்கள் பிரிவை சந்திக்க மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் நீங்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகள் தான் நாளை பல இடங்களில் கீழ்த்தரமான முறையில் பார்ட்டிகளை கொண்டாடும் சமூக சீரளிவுகளாக பரிணமிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? முன்னையவர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்றும் சொல்வீர்கள் இப்படித்தான் இராக்கிங் என்ற பகிடி வதைக்கும் நியாயம் கற்பிக்கிறீர்கள் இதனால் மற்றவர்களின் மனங்களை புண்படுத்தி அதிலே சுகம் காண்கிறீர்கள்.


நீங்கள் பின்பு ஒன்றும்தெரியாத அப்பாவிகள் போல சமூகத்துக்குள் நுழைகிறீர்கள் மற்றவர்களை வழிநடத்த முனைகிறீர்கள்.உங்களை வித்தியாசப்படுத்தி காட்ட இப்படியான முகவரிகள் உங்களுக்கு தேவைப்படகின்றனவோ?. உங்களுக்காகவும் உங்கள் உறவுகளுக்காகவும் கமலகாசன் பிறந்தநாளை கொண்டாடமல் இருக்கிறார் விஜய் உண்ணாவிரதமிருக்கிறார் நீங்கள் ஏதோ பொங்கு கொண்டாடிக்களைத்தவர்களாக கூத்தடிக்கிறீர்களா? பிரகடணங்களுக்கு முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதால் நீங்கள் உணர்வுள்ளவர்கள் என்று நாம் நம்பவேண்டும்? நீங்கள் நிகழ்வுகளில் அப்படியெல்லாம் நடந்துகொள்வதன்மூலம் நீங்கள் செய்தவைகள் எல்லாம் வெறும் கேலிக்கூத்துத்தான் போட்டீர்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை என்க்கு நன்றாக தெரியும் அதேபோல் கும்பலில் கோவிந்தா என நடந்தைவைகளையும் தெரியும் கடமை என்பதற்காய் கலந்துகொண்டவர்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை கொச்சைப்படுத்தவிலை அவற்றை ஆராதிக்கிறேன். எது எப்படியோ உங்களில் அரைவாசிப்பேருக்கு சுயநலம் அதிகம் பத்தாம்பசலித்தனமான மரபுக்கொண்டாட்டங்களில் உங்களை பெரியவர்களாக காட்டவேண்டும் அல்லது முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது என்பது வெளிப்படை இந்நிலையில் எதிர்கால சமுதாயத்தினை நினைக்கும்போது பயமாக இருக்கிறது.


உங்களை போராடுங்கள் என்றோ பகிஸ்கரியுங்கள் என்றோ கூறவில்லை நல்லமுறையில் கொண்டாடுங்கள் என்று கூற முயற்சிக்கிறேன்.திருந்த முயற்சியுங்கள் துன்பத்திலும் மகிழ்வது நன்றேயாயினும் அர்த்தமுள்ள வகையில் மகிழுங்கள் நீங்கள் விட்டுச்செல்லும் எச்சங்களை பலர் பின்பற்ற போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இன்னும் என் கோபம் தணியவில்லை...

0 comments

கருத்துரையிடுக