வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

''கவிதையின் கதை''

Posted by Thava திங்கள், 17 நவம்பர், 2008

அலங்கார வளைவுகளைத்தாண்டிய பின்னும்அரங்கிற்குள் நுழையத்தயங்கி நின்றது கவிதை!''
உன்னைப்பற்றித்தான்பேசுகிறார்கள்!உள்ளே போ''உபசரித்தார் ஒருவர்!
உள்ளேநிற்கவும் இடமில்லாநெருக்கடி!
அலட்டிக் கொள்ளத் தெரியாதமேடைவரை நடந்துபோய்மீண்டும் திரும்பிஇருக்கை தேடிஏமாற்றமடைந்தது!
சாகித்ய மண்டலசண்ட மாருதங்கள்..ஞானபீடவாணவேடிக்கைகள்..
இசங்களைக் கரைத்துரசங்களாய் குடித்தவர்கள்..த
மிழ்செத்துப் போய்விடக்கூடாதேஎன்றகருணையால்பேனாவைப் பிடித்திருக்கும்பிரும்மாக்கள்...
ஒருவர் கூடகவிதையைஉட்காரச் சொல்லவில்லை!
இடம் தேடும் கவிதையைஏறிட்டும் பார்க்கவில்லை!சுற்றிச் சுற்றிப் பார்த்துசோர்ந்த கவிதைஅரங்கிலிருந்துவெளியே வந்தது!
விமர்சனத்தின்கிழக்கு மேற்கு அறியாதகிராமத்து ரசிகர் ஒருவர்கேட்டார்:''உன்னைப் பற்றித்தான்விவாதம் நடக்கிறது..
நீயே வெளியேறுவதுநியாயமா?''
கவிதை அவரிடம்கனிவுடன் உரைத்தது:''அவர்களின் நோக்கமெல்லாம்என்னைப் பற்றிவிவாதிப்பது அல்ல..தம்மைப் பற்றித்தம்பட்டம் அடிப்பதே!''
- மு.மேத்தா

0 comments

கருத்துரையிடுக