இங்கே தினம் தினம் உறவுகள் செத்தவண்ணமிருக்க கடல்கடந்து வாழும் பலா் போராட்டங்கள் உதவிகள் செய்துகொண்டிருக்க நேரடி உறவுகளான நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? உதவி செய்ய முடியாது. போராட முடியாது கூத்து்களையாவது நிறுத்தலாமல்லவா? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாம் வழமையாக செய்வதெல்லாம் செய்கின்றோமல்லவா? புலம்பெயா்ந்து வாழும் எனது பள்ளி நண்பனின் இணையப்படங்களை பார்க்க முடிந்தது. அவன் ஒரு பத்திரிகையாளன் பல கட்டுரைகளை வரைந்திருக்கிறான் தமிழ்மக்கள் பற்றியெல்லாம் பிதற்றியிருக்கிறான்.ஆனால் அவனது கூத்ததுப்படங்களை பார்க்க ஆபாசமாகவல்லவா இருக்கிறது. யாருக்காக எதற்காக எழுதுகிறர்கள். இவா்களா நாளை நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்கப்போகின்றார்கள்? புலம்பெயர்ந்து வாழும் இளைய சமுதாயத்தின் 75 சதவீதம் நமது கலாச்சாரங்களை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். தமது பொழுது போக்குக்காக எம்மை திரும்பிப்பார்க்கும் இவர்களுக்கு நம்நாட்டில் இருந்து Fresh Fish தேவைப்படுகிறது. அனுப்பி வைப்பதற்கு இங்கே பேராசைக்கார பெற்றோர் இருக்கும் வரை யாரை நோவது?
0 comments