வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து ஒன்றினை கழித்து அந்த எண்ணிக்கையினால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளை பிரித்து ஒரு உறுப்பினரருக்காக கட்சிச்சின்னம் பெற்றிருக்கவேண்டிய வாக்குகள் தீரமானிக்கப்படும் . அந்த அடிப்படையில் இடங்கள் ஒவ்வொரு கட்சிக்குமான வாக்குகளில் இருந்து கழிக்கப்பட்டு அதற்குரிய இடங்கள் வழங்கப்படும்.
முதல் சுற்றில் கணிப்பில் வந்த ஒரு இடம் ஒதுக்குவதற்கான வாக்குகள் போதுமானதாக இல்லாவிடில் எஞ்சிய வாக்குகளில் கூடிய வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் கட்சிகளுக்கு பகிரப்படும்
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்காக கட்சிகளுக்குள் விருப்பு வாக்கு ஒழுங்கில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்
மாவட்டத்தில் கூடிய வாக்கு பெற்ற கட்சிக்கு முதலில் கழித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இடம் வழங்கப்படும்
இதனால் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாக்கு பெற்ற கட்சிக்கும் உறுப்பினர்கள் பகிரப்பட வாய்ப்பு உண்டு அதேவேளை கிடைக்கும் இடங்கள் கட்சிக்குள் பகிரப்படும்போது அங்கு குறைந்த விருப்பு வாக்கு பெறும் உறுப்பினரும் தெரிவுசெய்யப்படலாம்.
உதாரணம் -வன்னி மாவட்டம்
---------------
மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1000
மாவட்டத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 6
கட்சிகள் பெற்ற வாக்குகள்
A = 501
B =302
C =197
D =0
என வைத்துக்கொள்வோம்
இங்கே 5 வீதத்திற்கு மேலாக 3 கட்சிகள் பெற்றுள்ளன
A B C கவனத்தில் கொள்ளப்படும்
S= 6-1 =5 கணிப்புக்குரிய இடங்களின் எண்ணிக்கை (S)
N= 1000/5 =200 (முதலாவது சுற்றில் ஒரு இடத்தினை பெற ஒரு கட்சி தரவேண்டிய வாக்குகள்)
அதன்படி
A இற்கு 2 இடங்கள் போன பின் (501-400) =101 வாக்குகள் உள்ளன
B இற்கு 1 இடம் போன பின் (302-200) =102 வாக்குகள் உள்ளன
C இற்கு 197 வாக்குகள் உள்ளன முதற்சுற்றில் இடம் வழங்கப்பட போதாது
இனி பிரித்து தெரிவு செய்யப்பட வேண்டி 2 இடங்கள் உள்ளன அவை மிஞ்சிய வாக்குகள் எண்ணிக்கை ஒழுங்கில் பார்த்தால்
முதலாவதாக C இற்கு ஒன்றும் பின்னர் B இற்கு ஒன்றும் வழங்கப்படும். ஆரம்பத்தில் கழித்து ஒதுக்கிய ஒரு இடம் ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற கட்சியான A இற்கு வழங்கப்படும்
எனவே கட்சிகள் பெறும் இடங்கள் வருமாறு அமையும்
A : 3
B : 2
C : 1
இலங்கையின் மொத்த 225 உறுப்பினர்களில் மொத்தமாக 196 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 29 பேர் தேசிய ரீதியில் கூடுதலாக எடுத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிரப்படும்
அதில் பெரும்பாலும் தேசியக்கட்சிகளே கூடியளவில் சுவீகரிக்கும்
மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட வெண்டிய தமிழர் மாவட்ட பாராளுமன்ற இடங்கள் வருமாறு
யாழ்ப்பாணம் - 7
வன்னி - 6
மட்டக்களப்பு - 5
திருகோணமலை -4
அம்பாறை -7
வாக்காளர் ஒருவருக்கு 4 வாக்குகள் உள்ளன ஒரு வாக்கு கட்சி சின்னத்திற்கும்(கட்டாயமானது ) ஏனைய 3 வாக்குகள் (கட்டாயமானவை அல்ல)விருப்பு வாக்குகள் விரும்பிய 3 வேட்பாளர் இலக்கங்களுக்கும் வழங்கலாம்(அதிலும் வாக்குகளில் எத்தனையினையும் பயன்படுத்தலாம்). கட்சிக்கு வழங்காமல் விருப்பு வாக்கு வழங்க முடியாது

Facebook Security

Posted by Thava ஞாயிறு, 12 ஜூலை, 2015 0 comments

தேவையற்ற Link களை Click செய்தமையால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் பெயரில் பலருடய Face book சுவர்களில் அவர்களது அனுமதியின்றியே பகிரப்பட்ட ஆபாசப்படங்களை கடந்த சில தினங்களாக காணமுடிந்தது. உங்கள் அனுமதி இன்றி உங்கள் பெயர்களை படங்களில் Tag செய்வதினை தடுக்க வழி இதோ
Setting பகுதியில் Timeline and Taging என்ற பகுதியில் Who can add things to my timeline? என்ற வினாவிற்கு விடையாக Review posts that friends tag you in before they appear on your Timeline? என்ற தெரிவை On செய்து விடுங்கள் உங்கள் அனுமதியின்று உங்கள் சுவரில் படங்கள் எதுவும் வராதுhttps://www.facebook.com/settings?tab=timeline

2013 நிலவரப்படி இலங்கையில்
சுமார் 205 லட்சம் மக்கள் உள்ளனர்
100 லட்சம் ஆண்களும் 105 லட்சம் பெண்களும் உள்ளனர்
திருமணம் செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தவண்ணம் உள்ளது .புலம் பெயர்வு அதிகரித்தவண்ணம் உள்ளது





முகப்புத்தகத்தின் புள்ளி விபரப்பகுதிக்குள் சென்ற போது அதிகமாக பயன்படுத்தும் முகப்புத்தக பாவனையாளர் தொடர்பிலான முழு புள்ளிவிபரங்களும் பெறக்கூடியதாக இருந்தது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் 20 லட்சம்  தொடக்கம் 30 லட்சம் வரையிலான மாதாந்த பாவனையாளர்கள் காணப்படுகின்றனர்.அதில் 30 வீதம் மட்டுமே பெண்கள் 70 வீதமானவர்கள் ஆண்கள்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான செயற்படுநிலை பயனாளர்கள் உள்ளனர்.கிளிநொச்சியில் 6 ஆயிரம் வரையிலும் முல்லைத்தீவில் 2 ஆயிரம் வரையிலும் மன்னாரில் 7000 வரையிலும் வவுனியாவில் 15 ஆயிரம் வரையிலும்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 30 ஆயிரம் வரையிலும் திருகோணமலையில்  25 ஆயிரம் வரையிலும் அம்பாறையில் 10 ஆயிரம் வரையிலும்  செயற்படு பாவனையாளர் உள்ளனர்

இலங்கையில் பாவனையாளர்களில் 57 வீதம் திருமணமாகாதவர்கள் 29 வீதம் திருமணமானவர்கள்

இலங்கையில் பயனாளர்களில் 80 வீதமானவர்கள் பல்கலைக்கல்வி பெற்றவர்கள் அல்லது பெற்றுக்கொண்டிருப்பவரகள்

உலகளாவியரீதியில் 1 பில்லியனுக்கும் அதிகமான செயற்படுநிலை (Active) பாவனையாளர்கள் இருக்கின்றனர் அவர்களில்  55 வீதம் ஆண்கள் 45 வீதம் பெண்கள்

மொத்த மாதாந்த செயற்படு நிலை பாவனையாளரில் 0.2 வீதமானவர்களே இலங்கையர் முதலாவது இடத்தில் அமெரிக்காவும்(14%)  இரண்டாவது இடத்தில் இந்தியாவும்(9%) இருக்கின்றது .

இந்தியாவில் 150 மில்லியன் வரையிலான பயனாளர்கள் உள்ளனர்.(24 வீதம் பெண்கள் 76 வீதம் ஆண்கள்) தமிழ்நாட்டில் 10 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் அதிலும் சென்னையில் 4.5 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் சென்னைக்கு (53%) அடுத்தபடியாக கோயம்புத்தூரிலும்(9%) அடுத்த மதுரை (4%) சேலத்திலும் (3%) உள்ளனர்





யாருக்கு வாக்களிப்பது?

Posted by Thava சனி, 4 ஜூலை, 2015 0 comments

வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை.
அதற்காக வருந்தவில்லை

மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் தான் அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அவரது வெற்றியும் தோல்வியும் சிங்கள மக்களின் கையில் மட்டுமே இப்போது உள்ளது.

இங்கு நாம் எமது பிரதேச அரசியலை எடுத்துக்கொண்டால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்களின் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர்களது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தற்போது இல்லை. நிறைய பேர் வெளித்தள்ளப்பட்டனர் அல்லது வெளியேறினர் புதியவர்கள் பலர் நுழைந்தனர். ஆகமொத்தத்தில் அது உருமாற்றம் பெற்றுவிட்டது.

கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகிக்கும் தமிழரசுக்கட்சி உண்மையில் சனநாயகப்பண்புகளை பேணவில்லை. அடிப்படை கட்சி கட்டமைப்புக்களை பேணவில்லை .பெயரளவில் மாத்திரம் அது இருக்கிறது தவிர முடிவுகள் ஒரு சிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

சிறந்த எதிர்கால அரசியல் தலைமை வளர்த்தெடுக்கப்படவில்லை அல்லது அதற்கு அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தமது இருப்புக்களுக்காகவும் பதவிகளுக்காகவும் பிழைகளை சுட்டிக்காட்ட பலரும் தயங்குகின்றனர்

தமிழ்தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அடி்ப்படையில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பில் கொள்கை  ஒற்றுமை உடையவர்களாகவே உள்ளனர் ஆனால் பெயர்களால் மாயாஜாலம் செய்கின்றனர்.தேசம் நாடு என்பன இரண்டும் ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர் .State Province Country என்றவற்றில் வித்தியாசங்களை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதில் தெளிவு ஏற்படுத்துவதும் கடினம். அனைவரும் ஒற்றையாட்சிதான் வலியுறுத்துகின்றனர்

அப்படிப்பார்த்தால் ஒற்றையாட்சியினை தீர்வுக்கு சரிவராது என்று சொல்லும் கூட்டமைப்பு எந்தவகையிலும் மக்கள் முன்னணிக்கு சளைத்ததாக இருக்காது .

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இப்போது  ஒற்றையாட்சினை வலியுறுத்தும் சத்தியப்பிரமாணத்தில் கையெடுத்திடும் பராளுமன்ற  உறுப்பினர் பதவிக்காகதான் இரண்டும் போட்டியிடுகின்றன.கூட்டமைப்பின் நடவடிக்கைள் போக்குகளில் விரக்தியுற்றவர்களின் களமாக மக்கள் முன்னணி திகழ்கின்றது. கூடுதலாக இளைஞர்களின் ஆதரவினை அது கொண்டிருக்கின்றது

ஆரம்பத்தில் ஆதரவு குறைந்திருந்த அந்த கட்சி தற்போது ஆதரவினை பெற்று வருகின்றது. அதற்கு கூட்டமைப்பின் துாரநோக்கற்ற அரசியல் பணிகள் செயற்பாடுகள் தான் அன்றி தீர்வுக்கொள்கை தொடர்பிலான மாற்றுத்தேடலாக இந்த அணி திகழவில்லை என்று நாம் நம்புகின்றேன்.

இவ்வாறான மாற்று அணிஒன்று  இருப்பது அவசியமே அவ்வாறு இருந்தால் தான் கூட்டமைப்பு தன்னை திருத்திக்கொள்ள வழிசமைக்கும். இம்முறை முன்னணி 1 ஆசனைத்தினை பெற்றுக்கொண்டால் கூட கூட்டமைப்பு தன்னை திரும்பி யோசிக்க வைக்கும்.மாறங்களை உள்வாங்க அழுத்தத்தினை பிரயோகிக்கும் .

தொடர்ந்து தாயகம் விடுதலை மற்றும் புலி கோசங்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பமுடியாது அதற்கும் ஒரு கால வரையறை உண்டு யுத்தம் முடிந்து 6 ஆண்டு கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அவ்வாறான உணர்ச்சி நிலைகள் நவீன அரசியலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் முன்னாள்போராளிகளை கொண்டு  செய்யப்படும் அரசியல் எந்தவகையிலும் உணர்ச்சிகரமானதாக அமையப்போவதில்லை.

இது வரை அரசுடன் இணைந்திருந்த ஈபி டீபி போன்ற கட்சிகள் தமது இருப்பினை தமது வாக்கு வங்கிகளின் ஊடாக தக்கவைக்க பகீரத பிரயத்தனம் செய்தவிண்ணம் உள்ளன அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமது வாக்கு வங்கியினை அதிகரித்து ஒரு இடத்தினையாவது கைப்பற்றிவிடவேண்டும் என துடிக்கின்றன. இல்லாவிடடால் அவர்களால் தேசிய ரீதியில் கிடைக்கும் போனஸ் ஆசனத்துக்கான வாக்கு வங்கியில் அதிகரிப்பாவது  காட்ட முனைகின்றன.

மற்ற போட்டியிடப்போகும் உதிரிக்கட்சிகள் சுயேட்கைள் பற்றி கதைக்கவே தேவையில்லை.கட்டுப்பணத்தினை இழந்து போகும் நிலைதான்

யாழ் மாவட்டத்தி்ல் இருப்பதோ 7 இடங்கள் கூட்டமைப்பு 5 இனை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு 4  பெறுவது உறுதி.

கூட்டமைப்பின் மீதான ஆற்றாமையினை கொட்டுவதற்கான அல்லது கூட்டமைப்பு எதிர்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ள அழுத்தம் பிரயோகிப்பதற்காக  மக்கள் முன்னணிக்கும் வாக்களிப்பது தவறாகப்படவில்லை. மக்கள் முன்னணியினை ஆதரிப்பவர்களில் பலர் கூட்டமைப்பினையும் ஆதரி்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்கள் தான் பிரச்சனை கூட்டமைப்பின் உட்கட்சி சனநாயகம்தான் மிகப்பெரிய பிரச்சனை.இந்நிலையில் அதில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் தமிழ்த்தேசியத்துக்குதான் வாக்களிப்பதாக இருக்கும் என கருதுகின்றேன்

தேர்தலை புறக்கணிக்கச்சொன்னவர்கள் புறக்கணித்தவர்கள் அதனால் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு வாக்களித்தாலும் அது பிழையில்லை என்று எப்படி சொல்ல முடியும் என நீங்கள் கேட்டால் அவர்கள் கூட்டமைப்பினை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் தங்களை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தவே அவ்வாறு செய்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன்.இதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது வேறு கதை.

இரண்டு தரப்பும் பாராளுமன்றத்துக்கு சென்று தீர்வு தொடர்பில் எதுவும் சாதிப்பார்கள் என்று நான் கருதவில்லை. சிங்களவன் மனம் வைக்காத வரை எதுவும் நடடைபெறாது . எமது பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க பிரதிநிதிகள் செல்கிறார்கள் என்று திருப்திப்படலாம். அவ்வளவுதான். முன்னைய அரச ஆதரவு உதிரி கட்சிகள் போல இவர்கள் ஒருபோதும் மகிந்தவை ஏற்கவில்லை. மகிந்த இருந்திருந்தால் தீர்வு கிட்டியிருக்கும் என்றும் கூறியிருக்கவில்லை.

உண்மையில் தமிழ் மக்களின் தீர்வுக்காக இணக்கமின்றி தீவிரமாக போராடுபவர்களாக இருந்தால் இவர்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணித்திருக்கலாம். அதுவும் போராட்டம் தான் அப்படி செய்மாட்டார்கள். அது தவறுமில்லை.ஆக மொத்ததில் மோதகமும் கொழுக்கட்டையும் தான்.தென்னிலங்கையில் ஐக்கியதேசயகட்சியும் சுதந்திரக்கட்சியும் போல தான்.

என்னைக்கேட்டால் எதிர்காலத்தில் மக்கள் முன்னணி மகாணசபை உள்ளுராட்சி சபை அனைத்திலும் போட்டியிடவேண்டும் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றி கூட்டமைப்பிற்கு தலையிடியாக இருப்பதன் மூலம் எமக்கான தமிழ் தேசிய அரசியல் வலுவடையும்.

வீட்டுக்கா சைக்களுக்கா வாக்களிக்கபோகின்றீர்கள் என கேட்டால் இன்னும் முடிவில்லை என்பது தான் என் பதில்.இப்படித்தான் இங்கு பலரும்.அதனால் தமிழ்த்தேசியத்திற்கு பாதிப்பு என்று நான் கருதவில்லை எதோ ஒன்றை எல்லோரும் தெரிவுசெய்யபோகின்றோம் சுவை மாறாது.

தேர்தல் பார்வை தொடரும்..

யாழ் முகாமையாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய 15.05.2015 பொது விவாதம் 4.30 மணித்தியாலங்கள் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் என்கிறார். சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார் ஆனால் கஜேந்திரகுமார் தற்போதய நிலையில் முடியாது என்கிறார். கலந்து கொண்டவர்கள் இணைய வேண்டும் என்றனர்

சுமந்திரன் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு சுமந்திரன், தான் சட்டத்தரணி என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்களை முன் வைத்திருந்தார் .சம்பந்தனின் தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டும் என நாம் ஏன் கேட்கவேண்டும் அதைக்கேட்கிறோம் ? அதை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லவா அதேபோலத்தான் தேசியக்கொடியை ஏற்கத்தான் வேண்டும் என்று மடக்கினார் .அவர் எதிரியை மாற்றி நாங்கள் சென்றுகொண்டிருக்கும் படகினை கூத்தடித்து கவிழ்க்க வேண்டாம். என்று கேட்டுக்கொண்டார்.அரசியல் கைதிகள் பெரும்பாலானவர்கள் விரைவில் விடுதலை செய்யப்டபட உள்ளதாக தெரிவித்திருந்தார்.காணிகளில் ஒருபகுதி பொதுத்தேர்தலுக்குள் விடுவிக்கப்படும் பொதுத்தேர்தலின் பின் இதே அரசியல் நிலமை நீடித்தால் நிச்சயம் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்படலாம் என்றார்.தண்ணீர்ப்பிரச்சனையில் கூட்டமைப்பு தலையிட விரும்பவில்லை என்று சுறிய அவர் அது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதில் அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றார்

சுமந்திரன் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தற்போதைய தேசியக்கொடியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனினும் தேசியக்கொடி மாற்றம் ஏற்படும் வரை .இது தான் தேசியக்கொடி அதற்குரிய மதிப்பினை கொடுக்கத்தான் வேண்டும் அதில் தவறில்லை என்ற வாதத்தினை முன்வைத்தார்.தேசிய கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது ஜீ. ஜீ. பொன்னம்பலம் (கஜேந்திரகுமாரின் பேரன்) கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார் என சுமந்திரன் போட்டுடைத்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ கருத்தாக யாருடையதை ஏற்பது என்ற கேள்விக்கு பதிலாக ” அரசியல் தீர்வு விடயத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறப்பட்டுளே்ளதோ அதுதான் என்றும் மற்றைய விடயங்களில் கூடடமைப்புக்குள் முரண்பாடான கருத்துக்கள் வருவதை தவிர்க்கமுடியாது என்றும் கட்சிக்குள்ளேயே வேறுபட்ட கருத்துக்கள் உள்ள நிலையில் கூட்டமைப்புக்குள் வருவதை ஒன்றும்செய்யமுடியாது தானே என்றார்.

மேலும் 2010 இல் சரத்பொன்சேகா வை ஆதரிக்கும் விடயத்தில் முடிவு எடுக்கையில் கஜேந்திரகுமர் உள்ளே தான் இருந்திருந்தார் அவர் எதிர்த்த பொழுதிலும் தேர்தல் நடைபெறும்போது கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டினார்.எனவே முரண்பாடுகள் அமைப்புக்குள் தவிர்க்கமுடியாது என விவரித்தார்.

தேர்தல் வேளை யாழ்ப்பாணத்தில் மாவை. சேனாதிராஜா மைத்திரி தரப்புடன் எமக்கு உடன்படிக்கை இருக்கு அது எழுதப்படவில்லை அதை நாங்கள் தான் விரும்பவில்லை என்று கூற மைத்திரி ஆம்  எல்லாவற்றுக்கும் மேலாக இதயங்களில் ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கு என்று சொல்லி சென்றதை சுமந்திரன் ஞாபகப்படுத்தினார். எழுதிய ஒப்பந்தமே நிறைவேற்றப்படாத இந்த இலங்கையில் இதய ஒப்பந்தம் எந்தவகையில் சரியாகும் என  பல்கலைக்கழக விரிவுரையாளர் உதயன் கேள்வி எழுப்பினார்

இதயங்களுக்கிடையில் பேசப்பட்ட அந்த ஒப்பந்தத்தினை மக்களுக்கு வெளியிட்டால் அது நிறைவேற்றப்பட்டதா என்ன பின்னாளில் சரிபார்க்கமுடியும் என்றும் இல்லாவிடில் தோ்தல் முடிய ஏதோ ஒன்றை கூறி அது தான் இதய ஒப்பந்த விடயங்கள் என மழுப்ப முடியும் என விரிவுரையாளர் உதயன் சாடினார் அதற்கு சுமந்திரன் அது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என்றார்

சுமந்திரன் தன்மீது தனிப்பட்ட ரீதியில் நிறைய விமர்னங்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார் ஆனால் அவற்றுக்காக அவர் வருத்தபட்டிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தனது செயலை விரும்புவதாகவே கருதுகின்றார். மேலும் ஊடகங்கள் தான் தனது கருத்துக்களை திரித்து கூறுவதாகவும் உண்மையில் தான்கூறிய கருத்துக்கள் சரியான முறையில் தான் அமைந்திருந்தன என்றும் .சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரே விதமாகவே தான் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்

மகிந்த யாழ்ப்பாணம் வந்திருந்தால் மாகாணசபை உறுப்பினர்கள் அவரின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கலாம் என்று கூறிய சுமந்திரன் அப்படி செய்வதில் என்ன தப்பு என்று வினவினார்

திருக்குமரன் என்பவர் சம்பந்தன் விநாயகமூர்த்தி போன்ற அறளை தலைவர்களை அகற்றவேண்டும் என தெரிவித்த கருத்து பலராலும் கண்டணத்திற்கு உள்ளானது .சுமந்திரன் கொதித்து எழுத்தார் பின்னர் திருக்குமரன் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின்வரிசையில் இருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இளைய ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களுக்கு மட்டும் கைத்தட்டலிலும் இடக்கு முடக்காக உணர்ச்சி வசப்பட்டு சுமந்திரனை கலாய்ப்பதிலும் ஈடுபட்டமை வரவேற்கப்பட்டிருக்கவில்லை. சுமந்திரன் ஒரு சமயம் கைதட்ட கூட்டிவரப்பட்ட கூட்டம் அமைதிகாக்கவேண்டும் என்று கடிந்தார்.

கஜேந்திரகுமார் ஈபிடிபி தவராசா அவர்களையும் கலாய்க்க தவறவில்லை உங்கட கட்சி இணக்க அரசியல் என்று குறிப்பிட்டார். அதன்போது தவராசா கடுப்பாகிவிட்டார். கஜேந்திரகுமார் வாதம் நிறைய வெளிநாட்டு கதை சொல்வதிலேயே கழிந்தது.அவரது வாதம் கூட்டமைப்பினை விமர்சிப்பதிலும் இருந்தது. சாதாரண மக்களுக்கு புரியாத அரசியல் தீர்வு குறித்து அரசியல் தலைவர்கள்தான் எடுத்துரைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.சாதரண மக்கள வாழ்கைப்பிரச்சனைக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனை கூட்டமைப்பும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

கஜேந்திரகுமார் மேலும் உரையாற்றுகையில் தமிழ்மக்களுக்கான பிரச்சனையிக்குரிய தீர்வினை இலங்கைக்குள் மட்டும் வைத்து சிந்திப்பது முட்டாள் தனமானது மீண்டும் ஏமாற்றத்தினையே தரும் என்றும் அது உலாகளாவிய ரீதியில் பூகோள அரசியல் மா்ற்றத்திற்குட்பட்டு நகர்த்தவேண்டும் என்றும் அதற்கு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் , கிடைக்கின்ற ஆட்சிமாற்றங்களை தமிழர் நலன்களுக்குரிய பேரம் பேசும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியா ஒருபோதும் தனிநாட்டினை விரும்பவில்லை என்றும் இது போராளி இயக்கங்களுக்கு ஆதரவு தரப்படும் சமயத்திலேயே சொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சுமத்தினார். இந்தியாவை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என அமெரிக்காவுக்கு கூட்டமைப்பு வாக்குறுதியளித்திருந்ததாக கூறினார். ஆனால் அதனை மறுத்த சுமந்திரன் இந்தியாவின் ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான முடிவு மாற்றத்திற்கு புலம்பெயர்ந்த சிலரதும் தமிழ் நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளும் தான் காரணம் என தெரிவித்தார். தாங்கள் தான் இந்தியப்பிரதமர் சமஸ்டி தான் தீர்வு என கூறவைத்ததாக பெருமைப்பட்டுக்கொண்டார்

கஜேந்திரகுமார் கூறுகையில் ஒருநாடு பலதேசம் என்ற கொ்ள்கையில் முஸ்லிம்கள் மலையக மக்கள் தங்களுக்கென தேசங்களை வகுத்தால் அதிலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்றார்.இருப்பினும் தற்போது தமிழர் மட்டுமே தேசத்தினை கோருகின்றனர் என்றார்
மகிந்த ஏன் கொடுமையானவர் என்று நீண்ட பட்டியிலை சுமந்திரன் வெளியிட கஜேந்திரகுமார் அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட அதேவேளை மகிந்த மட்டுமா கொடுமையானவர் சந்திரிகா சரத்பொன்சேகா ரணில் அனைவரும் கொடுமையானவர்களே அவர்களும் எமக்கு எதிராகவே செய்பட்டனர் ஏன் அவர்களை கூட்டமைப்பு ஆதரிக்க முற்படுகிறது என தனக்கு தெரியவில்லை என்றார்
தமிழர் குறித்த ஆயிரக்கணக்கிலான ஆண்டுகளாகவே சிங்களவர் பயங்கொண்டுள்ளதாகவும் இவர்களது இலக்கு தமிழ் தேசத்தினை இல்லாதொழிப்பதொன்றே என்று கஜேந்திரகுமார் விளக்கினார்


டில்லியில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் 13வது திருத்தத்தினை மையப்படுத்தியே தீர்வுதிட்டம் அமையவேண்டும் என சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தியதின் விளைவாகவே அக்கூட்டம் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் அவர். அங்கே சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் இணைந்து வழங்கிய ஒரு உத்தேச தீர்வு வரைபினை  நாச்சியப்பன் நிராகரித்து விட்டதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.அவர்கள் டெல்கி செல்ல முதலேயே சில தரப்புகளின் ஏற்பாட்டில் இருவரும் சந்தித்து ஒரு பொது இணக்கப்பட்டிற்கு வந்திருந்தனர், அதையே அங்கு இருவரும் இணைந்து 3 பந்திகளில் எழுதி இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்,

நாச்சியப்பன், அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி சம்பந்தமான முதல் இரண்டு பந்திகளையும் ஏற்றுக்கொண்டு, அரசியல் தீர்வு சம்பந்தமான 3ம் பந்தியை, 13 ம் திருத்ததின் அடிப்படையிலான தீர்வு என எழுதுபடி கூற, ENDLF,PLOTE சங்கரி,போன்ற 4 கட்சிகள் அதனை ஒத்துக்கொண்டு, ஆமோதித்தன. எதிர்ப்பதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும் தானே,, எனவே கூட்டமைப்பும் தம்முடன் சேர்ந்து இதில் கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை கேட்டிருந்தன.அதே நேரம் 13 ம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு என்பதை நிராகரித்த தாம், தமிழரின் நலன் கருதி,கொள்கை ரீதியிலான முடிவை எடுத்து தம்முடன் இணைந்து கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை அழைத்திருந்ததாகவும், கூட்டமைப்பு  எல்லோரும் ஒற்றுமையாக போனால் தாம் கையெழுத்து வைப்பதாக கூறினர் என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரனின் குற்றச்சாட்டான இணைவதற்கு மக்கள்முன்னணிக்கு உள்ள பிரச்சனை தலைமைத்துவம்தான் என்பதற்கு பதிலளிக்கையில்  , நீதிபதி விக்கினேஸ்வரன் ஒருநாடு இருதேசம் கொள்கையினை ஆதரிப்பதாகவும் அதனாலேயே அவரின் தலைமையில் கூட்டமைப்பு வந்தால் தாங்கள் இணையமுடியும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.தந்தைசெல்வா ஆரம்பத்தில் தமிழீழ கோரிக்கைக்கு எதிராக அறிக்கையிட்டு தேர்தலில் நின்றவரென்றும் பின்னர் அவரே அந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்

தேசம் நாடு மற்றும் சுயநிர்ணயம் சமஸ்டி போன்றவை பற்றி கருத்துக்கள் அங்கே பகிரப்பட்டிருந்தது .சுமந்திரன் கூறுகையில் ” தேசம் என்பது குறித்து தனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் நிறைய வாதங்கள் இடம்பற்றுள்ளதாகவும் ஆனால் சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்ட சமஸ்டியானது தேசத்தினை ஒத்தது தான் என்று பொருள் பட வாதம் முன்வைத்தார் மேலும் தேசம் என்னும் போதும் அது கருத்தியல் ரீதியாகமட்டுமே உள்ளதாகவும் அங்கே சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்டிருப்பதாக தான் பார்க்கவில்லை என்றும் எனவே சம்பந்தன் சொல்வது போல தேசம் வெற்றுக்கோசம் தான் என்றார். கூட்டமைப்பு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய சமஸ்டிக்கு தான் தாம் இணங்குவோம் என்றும் கூறினார்

இருவரும் இதுவரை வெளியில் பகிராத நிறைய உள் வீட்டுத்தகவல்களை எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
மைத்திரி அரசாங்கத்துடன் பேச்சளவில் செய்யப்பட்ட உடன்படிக்கை குறித்து தேர்தலுக்கு முன்பாக கூட்டமைப்பு வெளியிடும் என்று சுமந்திரன் கூறினார்.

சில விருப்பத்தகாத வாதங்களும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்த போதிலும் இனிதே நிறைவுபெற்றது. இருதரப்பும் மல்லுக்கு நிற்காமல் இணைந்து தீர்வு குறித்து விரிவாக சிந்திக்கவேண்டும்.

இறுதியில் ஒரு இளைஞர் ”வாக்குறுதிகள் உடன்படிக்கைகள் என்று தலைவர்கள் கதைக்கையில் எதிர்கால சந்ததியினருக்கு தீர்வு குறித்த என்ன செய்தியினை தமிழ் தேசியக்கட்சிகள் விட்டுச்செல்ல விரும்புகின்றன என்ற இளைஞர்களின் அச்சத்தினை போக்கவேண்டும் ” என்ற கருத்து முத்தானதாக இருந்தது!

சில வினாக்கள் கேட்கப்பட்டன நிறைய வினாக்கள் என்ற பெயரில் கருத்துகளாக கூறப்பட்டன. நிதானம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பு நிலவிய அந்த கூட்டத்தில் நான் எந்த கேள்வியும் கேட்பதை தவிர்த்து விட்டேன். இறுதியில் போகும் போது தனிப்பட சுமந்திரனிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன் ”சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தவிர்த்தால் நல்லது” கவனத்தில் கொள்கின்றேன் என்றார்!

என்னைப்பொறுத்தவரை இருதரப்பிடமும் கருத்தியல் ரீதியாக தவிர பொதுமக்கள் முன்னிலையில் முன் வைக்கக்கூடிய உத்தேச தீர்வுத்திட்டம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியும் தாம் சொல்வது செய்வது சரி என்றே கூற வருகின்றன. ஒருவகையில் இருகட்சிகளும் கொழுக்கட்டையும் மோதகமும் போன்றதே. எனவே இன்றைய நிலையில் தேர்தல் தான் பதில் சொல்லப்போகின்றது.
ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக மக்கள் அவ்வளவு விரைவில் வீட்டில் இருந்து சைக்கிளுக்கு மாறி விடுவார்கள் என்று நான் கருதவில்லை.

முழுமையான காணொளி



புலம்பெயர்ந்தவர்களே முதலிடுங்கள்!

Posted by Thava புதன், 16 அக்டோபர், 2013 0 comments

வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரம்அபிவிருத்தி கல்வி மேம்பாடு போன்ற வற்றில் அக்கறை செலுத்தும் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானவர்கள் குறுகிய கால நன்மை தரக்கூடிய உதவிகளில் தான் நிறைய பங்களிப்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாணவருக்கு பயிற்சிக்கொப்பி ,விதைவைக்கு உதவிப்பணம் வாங்கிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது அவர்களின் உதவி. 

உதவி தேவையானவர்களைவிட வழங்குதற்காக முளைத்துள்ள உள்ளுர் உதவி வழங்கும் நிறுவனங்கள் , இணையத்தளங்களின் எண்ணிக்கை அதிகம். புலம்பெயர்ந்தவர்கள் நீண்டகால நோக்கிலான உதவிகளை செய்வதே நல்லது. குறித்த உதவி தொடர்ந்து வழங்கக்கூடிய அல்லது உதவிபெறுபவர்கள் தங்கி வாழ்வதில் இருந்த மீண்டு வரக்கூடிய நிலையினை எய்தும்வரையிலான உதவிகளாக இருப்பதற்கு உறுதிசெய்யவேண்டும்

அப்பியாசக்கொப்பிகளை வழங்குவதிலேயே அரசியலை ஆரம்பிக்கிறார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள். ஒரு வீடமைப்புத்திட்டத்தினை வழங்கலாம். ஒரு கல்விக்கூடத்தினை ஆரம்பிக்கலாம்(வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்று கூறும் கூடங்களை அல்ல,வெளிநாட்டு பல்கலைக்கழகத்துக்கு ஆட்பிடிக்கும் நிலையங்களையும் அல்ல). பாடசாலை உபகரணங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களை ஆரம்பித்து வேலை வாய்ப்பினை கொடுத்து அதன் இலாபத்தினை மாணவர்களுக்கு உதவியாக வழங்கினால் நிறைய மாற்றம் ஏற்படும்.

நிதியங்களை ஏற்படுத்தி அதன் வட்டியில் இருந்து மாணவர் புலமைப்பரிசில்களை வழங்கலாம்,மருத்துவ உதவிகளை வழங்கலாம். புதிய மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும்.பாதிக்கபட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம்.


இதைவிட எம்மக்களின் அவலங்களை காட்டி புலம்பெயர் தேசங்கள் பலவற்றில் இன்னும் பணம்சேகரிப்பு நின்றபாடில்லை. சரி சேகரிக்கப்படுபவை உரியவர்களை உரிய திட்டங்களினை அடைகின்றனவாயின் சந்தோசப்படலாம் ஆனால் ஒரு சில தவிர பல சேகரிப்பவர்களின் பொக்கட்டுக்களுக்குள்ளேயே போகின்றன.அதனால் உண்மையாக சேவை செய்ய முன்வருபவர்களுக்கும் பின்னாளில் உதவி இல்லாது போகின்றது.

எனவே புலம் பெயர்ந்தவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலான நிலையான முதலீடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் நீர்கொழும்பில் கோட்டலுக்கு முதலீடு செய்ய இங்கு காங்கேசன்துறையில் கோட்டலுக்கு இராணுவத்தினர் முதலீடு செய்கின்றனர்.

பலர் இங்கு உறவினர்களால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். தமது குறுகிய கால நலன்களுக்காகவும் உடனடி பணக்காரத்திட்டங்களுக்காகவும் முதலீடுகளை பிழையாக பயன்படுத்துகின்றனர்.முதலீட்டாளர்களின் சரியான நேரடி கண்பாணிப்பின்மையாலும் பொறுப்பற்ற முகாமைத்துவங்களால் தொழிற்துறைகள் தோல்வியடைகின்றன.

இங்கே கடைகளை கட்டுவதற்குதான் முதலீடுகள் வருகின்றனவே தவிர தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் கிடைப்பதில்லை. தொழிற்துறை ஆளுமையுள்ளவரிடம் பணம் இல்லை பணமுள்ளவரிடம் தொழிற்துறை ஆளுமை இல்லை. முதற்தோல்வியிலேயே முழுவைதையும் கைவிட்டோடுவதற்கு அவர்களுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அன்பளிப்புக்கள் வழிகோலுகின்றன. 


கட்டப்பட கடைத்தொகுதிகள் பல முற்பணங்களுக்காக காத்திருக்கின்றன. இன்னமும் கட்டிடங்கள் முளைக்கின்றன. உற்பத்தி மற்றும் சேவைகள் குறித்த தொழிற்துறை முயற்சிகளுக்கான முதலீடுகள் மிக மிக குறைவாக காணப்படுகிறது. வாங்கி விற்கும் முயற்சிகளுக்கு தான் முதலீடுகள் கரைகின்றன. சரியான திட்டமிடலின்றி வியாபாரம் செய்து விட்டு உலக ஒழுங்கில் தமது முயற்சிகளை செய்யாமல் விட்டுவிட்டு வங்கிகளை குறை கூறி சொல்லாமால் கொள்ளாமல் தப்பி ஓடுகிறார்கள்.

நீண்டகால பொருளாதார மாற்றத்தினை நோக்கிய , தூரநோக்குடைய தொழில் முயற்சிகள் குறைவு. ஒருவர் செய்தால் அதைப்பார்த்து மற்றவரும் அதேபோல செய்யும் மனப்பான்மை வளர்ந்துவருகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு அதுவும் சரியான முகாமைத்துவம் சந்தைப்படுத்தல் கணக்கியல் நடைமுறைகள் திட்டங்கள் உடனான முயற்சிகளில் ஈடுபட முன்வரவேண்டும். 

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர் முதலீட்டை ஆதரிக்கின்றது அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கின்றது என பலர் பயப்படுகின்றனர். உண்மைதான் அரசாங்கத்தின் உள்நோக்கத்தில் முக்கியம் தனது அரசை பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்றவேண்டும். அதேவேளை தனது பங்குடமையினை குறிப்பிட்ட இடங்களில் உறுதிசெய்து அரசில் உள்ளவர்கள் தமது சொந்த வங்கி வைப்பினையும் அதிகரிக்கவேண்டும் என்பதுதான். இதை நாம் அறிவு பூர்வமாக பயன்படுத்தி எமது பிரதேசங்களை வளப்படுத்தலாம். தேவையற்ற பயத்தினை கையிடலாம். அதேவேளை பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.


நவீன தோட்டங்கள் உருவாக வேண்டும். சூழலை சூறையாடாத கைத்தொழிற்பேட்டைகள் வரவேண்டும்.மாசு தரும் மற்றும் எம் இயற்கை வளங்களை இல்லாதொழிக்கும் தொழிற்சாலைகள் அவசியமில்லை.மீள் சுழற்சி முறையிலான் உற்பத்தி பொறிமுறை வளர்க்கப்படவேண்டும்

”நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ” என்பதற்கிணங்க நன்மை அவர்களுக்கும் (அரசு) கிடைக்கபோகின்றதென்றாலும் நாம் எமது பிரதேசத்தை முதலீடுகள் மூலம் வளப்படுத்தி மக்களையும் ஒரு அடுத்த கட்ட வாழ்க்கை வட்டத்திற்கு அழைத்துவரத்தயங்கினால் தரவைக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை தடுக்கவே முடியாது. அப்பியாசக்கொப்பிகளையும் புத்தகப்பைகளையும் காலணிகளையும் தென்னிலங்ககையில் வாங்கி அன்பளிப்புச்செய்து கொண்டே இருப்போம். எமது மக்கள் புலம்பெயர்வார்கள் . புலம்பெயர் மக்களின் முதலீட்டில் தென்னிலங்கை வளப்படும். .சிந்திப்போம் செயல்படுவோம் இதுபற்றி நிறைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகேின்றேன்