வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து ஒன்றினை கழித்து அந்த எண்ணிக்கையினால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளை பிரித்து ஒரு உறுப்பினரருக்காக கட்சிச்சின்னம் பெற்றிருக்கவேண்டிய வாக்குகள் தீரமானிக்கப்படும் . அந்த அடிப்படையில் இடங்கள் ஒவ்வொரு கட்சிக்குமான வாக்குகளில் இருந்து கழிக்கப்பட்டு அதற்குரிய இடங்கள் வழங்கப்படும்.
முதல் சுற்றில் கணிப்பில் வந்த ஒரு இடம் ஒதுக்குவதற்கான வாக்குகள் போதுமானதாக இல்லாவிடில் எஞ்சிய வாக்குகளில் கூடிய வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் கட்சிகளுக்கு பகிரப்படும்
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்காக கட்சிகளுக்குள் விருப்பு வாக்கு ஒழுங்கில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்
மாவட்டத்தில் கூடிய வாக்கு பெற்ற கட்சிக்கு முதலில் கழித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இடம் வழங்கப்படும்
இதனால் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாக்கு பெற்ற கட்சிக்கும் உறுப்பினர்கள் பகிரப்பட வாய்ப்பு உண்டு அதேவேளை கிடைக்கும் இடங்கள் கட்சிக்குள் பகிரப்படும்போது அங்கு குறைந்த விருப்பு வாக்கு பெறும் உறுப்பினரும் தெரிவுசெய்யப்படலாம்.
உதாரணம் -வன்னி மாவட்டம்
---------------
மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1000
மாவட்டத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 6
கட்சிகள் பெற்ற வாக்குகள்
A = 501
B =302
C =197
D =0
என வைத்துக்கொள்வோம்
இங்கே 5 வீதத்திற்கு மேலாக 3 கட்சிகள் பெற்றுள்ளன
A B C கவனத்தில் கொள்ளப்படும்
S= 6-1 =5 கணிப்புக்குரிய இடங்களின் எண்ணிக்கை (S)
N= 1000/5 =200 (முதலாவது சுற்றில் ஒரு இடத்தினை பெற ஒரு கட்சி தரவேண்டிய வாக்குகள்)
அதன்படி
A இற்கு 2 இடங்கள் போன பின் (501-400) =101 வாக்குகள் உள்ளன
B இற்கு 1 இடம் போன பின் (302-200) =102 வாக்குகள் உள்ளன
C இற்கு 197 வாக்குகள் உள்ளன முதற்சுற்றில் இடம் வழங்கப்பட போதாது
இனி பிரித்து தெரிவு செய்யப்பட வேண்டி 2 இடங்கள் உள்ளன அவை மிஞ்சிய வாக்குகள் எண்ணிக்கை ஒழுங்கில் பார்த்தால்
முதலாவதாக C இற்கு ஒன்றும் பின்னர் B இற்கு ஒன்றும் வழங்கப்படும். ஆரம்பத்தில் கழித்து ஒதுக்கிய ஒரு இடம் ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற கட்சியான A இற்கு வழங்கப்படும்
எனவே கட்சிகள் பெறும் இடங்கள் வருமாறு அமையும்
A : 3
B : 2
C : 1
இலங்கையின் மொத்த 225 உறுப்பினர்களில் மொத்தமாக 196 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 29 பேர் தேசிய ரீதியில் கூடுதலாக எடுத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிரப்படும்
அதில் பெரும்பாலும் தேசியக்கட்சிகளே கூடியளவில் சுவீகரிக்கும்
மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட வெண்டிய தமிழர் மாவட்ட பாராளுமன்ற இடங்கள் வருமாறு
யாழ்ப்பாணம் - 7
வன்னி - 6
மட்டக்களப்பு - 5
திருகோணமலை -4
அம்பாறை -7
வாக்காளர் ஒருவருக்கு 4 வாக்குகள் உள்ளன ஒரு வாக்கு கட்சி சின்னத்திற்கும்(கட்டாயமானது ) ஏனைய 3 வாக்குகள் (கட்டாயமானவை அல்ல)விருப்பு வாக்குகள் விரும்பிய 3 வேட்பாளர் இலக்கங்களுக்கும் வழங்கலாம்(அதிலும் வாக்குகளில் எத்தனையினையும் பயன்படுத்தலாம்). கட்சிக்கு வழங்காமல் விருப்பு வாக்கு வழங்க முடியாது

0 comments

கருத்துரையிடுக