வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது. 

போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்

அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.

அதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே!

இராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா?

இந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க

எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா? மன்னிப்பு கேட்பாரா?

-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்

0 comments

கருத்துரையிடுக