வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

தமிழக தேர்தல் குறித்து எனது நிலைப்பாட்டினை சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தவனாக இருந்தாலும் அதுவிடயத்தில் கருத்து சொல்ல காரணம் இதுதான். எமது ஈழப்பிரச்சனையினை குறிவவைத்தே பலவேளைகளில் தமிழக அரசியலில் அது சட்ட மன்ற தேர்தலாக இருக்கட்டும்.நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

அதே போல தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக இருக்கட்டும் ஈழப்பிரச்சனையாக இருக்கட்டும் அது குறித்து அமைப்புக்கள் உருவெடுப்பது அரசியலுக்ள் உள்நுழைவதற்கானதாகவே இருந்திருக்கிறது. அது ஆரம்பத்திலேயே எம்மால் உணர முடியும். ஈழத்தமிழருக்கான பல்வேறு கட்சிகளின் அமைபப்புக்கள் , அன்னசாரேவின் ஊழலுக்கெதிரான போராட்டம், நாம் தமிழர் அமைப்பு , கூடங்குளம் அணுமின்னிலையத்திற்கு எதிரான உதயகுமாரனின் போராட்டம் அனைத்தும் எனது எண்ணவோட்டத்தில்  ஆரம்பத்திலேயே அரசியலுக்கான அத்திவாரமாக தெரிந்தன. ஆனால் கடைசியில் அதுதான் நிகழ்ந்தது. ஆனால் இது ஒன்றும் தவறானதாக எனக்கு படவில்லை.அது யதார்த்தமானதே  அரசியலும் மக்கள் எழுச்சிகளும் பிரச்சனைகளுக்கெதிரான கருத்துருவாக்கங்களும் இறுதியில் அரசியலில் தான் சங்கமிக்கின்றன. நடிகர் சங்கங்கள் கூட அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கூடியதே.

அவ்வாறே சீமானின் நாம் தமிழர் கட்சியின்  ஈழத்தமிழர் குறித்த அக்கறை தமிழ்த்தேசிய அக்கறை பன்னாட்டு நிறுவனங்களுககு எதிரான கொள்கை சாதி மதச்சார்பற்ற கொள்கைகள் 100 வீத எதிர்பார்ப்புகள் அற்றது என்று கூறி விடமுடியாது.மற்றைய கட்சிகள் போலவே அவர்களும் ஆட்சி கிடைத்தால் சில விடயங்களில் கொள்கைகளுக்கு மாறாக அவற்றை மாற்றிக்கொள்ள சந்தர்பங்கள் இல்லை என்று அடித்து கூறிவிடமுடியாது.

அதே போல மக்கள் நல கூட்டணியை சேர்ந்தவர்களும் , நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் ஈழத்தமிழர் போராட்ட அடையாளங்களை பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் அதிமுக திமுக போன்றவை அந்த அடையாளங்களை பயன்படுத்துவது ஒப்பீட்டில் குறைவு அவர்கள் தங்கள் கட்சித்தலைமைகளின் மீதான தனிமனித வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு அது தேவைப்பட்டிருக்காமல் போயிருக்கலாம்.அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையினை தமக்கு பயன்படுத்துவதும் ஒப்பீட்டளவில் குறைவு.அருந்தபொழுதிலும் சரிவுகளை நிமிர்த்த பயன்படுத்தி வந்துள்ளனர்

தமிழகத்தால் ஈழத்தமிழருக்கு தமிழீழம் வாங்கித்தரமுடியாது என்பது  வெள்ளிடைமலை. இதற்காக தமிழக அரசியல்வாதிகளின் மக்களின் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை உணர்வுகளை அரசியல் நகர்வுகளை முழுவதுமாக கொச்சைப்படுத்தி விடவும் முடியாது. அவர்கள் யாதார்த்தத்திற்கு மேலான உணர்வுகளை கொண்டிருப்பதும் உண்மை. ஆனால் அந்த வேளைகளில் அந்த உணர்வினை தம் நாட்டு விடயங்களில் காட்டுவதில்லை காரணம் அது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது.அந்த இடத்தில் அவர்கள் ஒற்றுமை

சரி இப்ப இந்தத்தேர்தலில் யார் ஆதரிக்க சிறந்தவர்கள் என்ற  கேள்வி எழும்போது சாத்தியங்கள் அல்லாத சில விடயங்கள் கொண்டிருந்தாலும் எமது விடுதலைப்போராட்டத்தில் தலைமையால் முன்னெடுக்கப்பட்ட கட்டமைப்புத்திட்டங்களை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டும் தமிழனுக்கே உரித்தான மிடுக்கு வீரம் மொழி இயற்கை பாரம்பரியங்கள் போன்றவற்றை கடைப்பிடிக்க இளைய தலைமுறையினை வளர்த்தெடுக்கும் வகையில் சலுகை அரசியலுக்கெதிரான தன்னிறைவு பொருளாதார கொள்கைககளை ஓரளவுக்கேனும் கொண்டிருக்கும் பாரம்பரிய அடிபணிவு தமிழக அரசியல்  கலாச்சாரத்தினை மாற்றுவேன் என்றும் கூறிக்கொண்டு புறப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி எனக்கு முதன்மையாக படுகின்றது.

மக்கள்நலக்கூட்டணி ஏன் தெரிவாக முடியாது என்று கேட்டால் அதில் அரசியல் அனுபவம் , மாறி மாறி க்கூட்டுவைத்த அனுபவம் தவிர நாம் தமிழர் கட்சியில் இருந்து வித்தியாசப்படும் படியான எதுவும் பெரிதாக எதுவும் எனக்கு தோற்றவில்லை. மாற்றம் என்று கருதினால் அதில் மாற்றம் தெளிவாக தெரிய வேண்டும்.

மாறி மாறி இரண்டு கட்சிகளின் கையில் இழுபட்ட அரசியலை மாற்று அணி ஒன்றுக்கு வழங்கி பார்க்க வேண்டிய தேவை தமிழக மக்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறியே.

இருந்தாலும் மக்கள் நலக்கூட்டணியைகூட சாதாரணமாக பார்த்துவிட முடியாது தேர்தலின் பின்னராவது அவர்களும் நாம் தமிழர் கட்சியும் கூட்டாக இணைந்தால் நிச்சயம் விரும்பிய மாற்றத்தினை ஓரளவுக்கேனும் மக்கள் அனுபவிக்க முடியும்.திடீரென நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நான் கனவு காண விரும்பவில்லை. நிச்சயமாக இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் இந்த தேர்தல் சவாலாகவே இருக்கும் என்பது வெளியில் இருந்தான அவதானிப்பாக உள்ளது களநிலமை தமிழக மக்களின் கையில்தான்.

0 comments

கருத்துரையிடுக