வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.

இரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே மேலானது என நான் கருதுகின்றேன். 

தாய் மொழியில் கற்கும் சுக அனுபவமும் புரிதலும் வேற்றுமொழியில் கிடையவே கிடையாது.இதை மறுதலிப்பவர்கள் சுத்த முட்டாள்கள்.வரட்டுக்கௌரவம் கொண்டவர்கள் என்றே நான் கூறுவேன். தாய்மொழிக்கல்வியில் சிறந்த அபிவிருத்தியை பெற்ற தேசங்கள் நிறைய உண்டு.இதற்கு யப்பான் சீனா நாடுகள் சிறந்த உதாரணம் .

ஆங்கில அறிவு வேண்டும் அது ஒரு மொழிக்கல்வியாக கற்பிக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.அதற்காக தமிழ் மொழியில் கற்றவர்கள் நல்ல நிலையில் இல்லை வேலைவாய்ப்பில்லை என்று கூறுவதெல்லாம் யாரையோ திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் வாதங்கள்.

ஆங்கிலமொழிக்கல்வியை முற்றாக எதிர்பவர்களுக்கு எதிராக இங்கு கருத்துக்களை முன்வைப்பவர்கள் சரியாக காரணங்களை முன்வைக்கவேண்டுமே தவிர தாய்மொழிக்கல்வியையும் அதனை பெற்றவர்களையும் கொச்சைப்படுததும் வகையிலும் வாதம்செய்யக்கூடாது.

எனது குடும்பத்தில் சகலரும் தாய்மொழியில் கல்வி கற்பதையே ஊக்குவிப்பேன் அத்துடன் ஆங்கிலமொழிக்கல்வியை இரண்டாம் பாடமாக ஊக்குவிப்பேன்.அரசாங்கங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் பொதுநலன் அப்படையில் தான் திட்டங்களை முன்மொழியவேண்டும்.ஒரு சிலரின் நலன்களுக்காக தொழிற்பட முடியாது.

என்னைப்பொறுத்தவரை அரசுகள் தாய்மொழிக்ல்வியை ஊக்குவிகவேண்டும். இதேவேளை ஆங்கிலமொழிக்கல்வியை விரும்புவர்களின் உரிமையினை மதித்து சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் அவ்வளவுதான்.அதற்காக ஆங்கிலமொழிக்கல்வி தான் இனித்தேவை என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடாது


அனுபவத்தில் அறிந்த உண்மை தான் நான் கூறுவது என்னுடைய நண்பர்கள் மாணவர்கள் என்னுடைய ஆசான்கள் மூத்தவர்கள் மற்றும் நான் முன்மாதிரியாக பார்க்கின்ற மனிதர்கள் ஏன் கண்டுபிடிப்புக்களை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது சொந்த தாய்மொழியில்தான் தொடக்க கல்விபயின்றவர்கள். அவர்கள் எவரும் கெட்டலைந்துபோகவில்லை. 

தமிழ்மொழிக்கல்வியை வற்புறுத்துபவர்களை நாம் பிரித்துப்பார்க்கமுடியாது.குறிப்பாக அரசியல்வாதிகளை நாம் கணக்கில் எடுக்கவே தேவையில்லை அவர்கள் மக்களின் எண்ணஅலைகளுக்காக பேசுகின்றவர்களே தவிர அவர்களின் சொந்த வாழக்கைக்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எதையும் நாம் பகுத்தறியும் போக்கும் இருக்கவேண்டும். அவர்கள் ஆங்கிலமூல கல்வியை கற்றுவிட்டு பேசுகின்றார்கள் என்பதற்காக உண்மைகளை நாம் மறைக்கமுடியாது.

ஒரு தமிழராக உங்கள் மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஒன்றைப்பற்றி ஒரு வல்லுனர் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அதனையே தமிழிலும் அழகாக விளங்கப்படுத்துகின்றார் எனில் எது உங்களுக்கு கூடுதலாக புரியும் ?

 நான் கணினி படித்தேன் தொடக்கத்தில் ஆசிரியா் தமிழில் கற்பித்தார் மேற்படிப்புக்கு வரும்போது ஆங்கில மூலம் தான் கற்பிக்கப்பட்டது. எனக்கு நான் தமிழில் கற்றதை வித ஆங்கிலத்தில் கற்றதில் புரிதல் குறைவாக இருந்தது. அதேவேளை நான் சிறுவயதில் கற்ற ஆங்கில மொழி ஆங்கில மூலம் பின்னர் கற்க வழிசெய்தது. இப்போதும் தமிழில் நான் எனது மாணவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களுக்கு புரிகிறது. ஆங்கில மொழி மூலத்தில் பலருக்கு பரீட்சைக்கு விடை எழுதும்போது தெரிந்ததை எழுத முடியாமல் திணறுகின்றனர் இதேபோல தெரிந்ததை சொல்லமுடியாமல் திணறுகின்றனர். எல்ல வகையிலும் தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் கற்றல் நடவடிக்ககைகள் செய்யும்போது மனப்பாடம் தான் முன்னிலை வகிக்கின்றது. புரிதலுடன் கூடிய பிரயோகம் பின்னிற்கிறது.

சிறந்த வளவாளர்கள் இருந்தால் தாய்மொழிக்கல்வி சிறப்புப்பெறும்.அதற்கு தாய்மொழிப்புலமையுள்ள வளவாளர்கள் இல்லாமல் போவது தான் காரணம் ஆகமொத்தத்தில் தாய்மொழிக்கல்வி தரம் குறைவதற்கு வேற்றுமொழிக்கல்விதான் காரணமாகின்றது. அதற்கு தமிழர்களின் வரட்டு கௌரவம் வழிசெய்கிறது.

தமிழ்மொழிமூலக்கல்வி என்று சொல்வதை விட தாய்மொழிமூலக்கல்வி என்று கூறுவதே சிறந்தது. இன்று எமது மொழி சிதைக்கப்படுவதற்கு ஊடங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள்தான் பல்வேறுவழிகளிலும் மனங்களை மாற்றி ஏதோ ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமொழிக்கல்வி தான் எதிர்காலம் என்ற எண்ணத்தினை மாற்றாமல் விதைக்கின்றன. அவைமாறினால் தான் மனங்கள் மாறும்.இந்த நிலமை இந்தியாவில் கூடியதாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது நீண்டதூரம் பயணித்தும் விட்டது. இலங்கையில் அப்படிஒரு நிலை வரும் என்று நான் எண்ணவில்லை.

இது நிற்க ஆங்கிலமோழிமூலக்கல்வியை தெரிவுசெய்பவர்களது உரிமையினை மறுப்பதிற்கில்லை இது அவர்களின்விருப்பம். ஆனால் அது தான் இனி எதிர்காலம் அது அன்றி சாதிக்கமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம்.


தொடக்ககல்வியின் தரம் பேண நவீனம் புகுத்தப்படவேண்டும். அந்த நவீனம் ஆங்கிலமல்ல! தொழில்நுட்பம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றில் தான் அந்த தேவை உள்ளது இதை செய்யுங்கள். தரம் மேலோங்கும் . அதை விடுத்துஆங்கிலம் தான் வாழ்க்கையிலும் கல்வியிலும் நவீனம் என்பது சுத்த மடத்தனம்!

ஒரு கற்கைநெறியினை எந்த மொழியில் கற்றோம் என்பதல்ல பிரச்சனை அதை எந்தளவுக்கு புரிதலுடன் கற்று அந்த கற்கைநெறியின் இலக்கினை அடைந்தோம் என்பதுதான் பிரச்சனை இதனை ஒவ்வொருமட்டத்திலும் இருக்கின்றவர்கள் உணராதவகையில் ஆங்கில மோகத்தினை தடுக்கமுடியாது. இசைக்கு போல அறிவுக்கும் மொழி கிடையாது என்பதை நாம் உணரவேண்டும். இலகுவாக அறிவைப்பெருக்க வழியிருக்கையில் ஏன் இந்த மேட்டிமை மொழி மோகமோ!

தமிழை வாழ வைப்பதற்கும் தமிழில்(தாய்மொழி) கல்விகற்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது  மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியம் எ்னபது உண்மை அதற்கு ஆங்கில மொழியை நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசான்களை நியமியுங்கள் அதை விடுத்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவிக்கவேண்டாம்.உங்களுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்றால் வரவேற்றுக்கொள்ளுங்கள் .அது உங்கள் உரிமை இரண்டு மொழிக்கல்வியியும் அறிமுகப்படுத்தலாம் அதற்காக இப்படி தாய்மொழிக்கல்வியை கேவலப்படுத்தாதீர்கள்

0 comments

கருத்துரையிடுக