வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

முன்கோபம்

Posted by Thava ஞாயிறு, 9 நவம்பர், 2008

சிலவருடங்களுக்கு முன்வரை எனக்கு முன்கோபம் அதிகம்!.தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறேன்.இயன்றவரை வெற்றி கண்டிருக்கின்றேன்.இந்தப்பணியில் எனக்கு உதவுவது கூடுதலாக என் அம்மாதான். எல்லா விடயங்களையும் அவரிடம் மனம் திறந்து பேசுவேன் எனது தங்கைமார்கூட இப்படி அம்மாவிடம் மனவிட்டு பேசமாட்டார்கள். கோபத்தினை குறைப்பதற்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் நல்ல மருந்து மனதில் உள்ளதை கொட்டிவிடுவதுதான். அம்மா ஒன்றை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் தன்னுடைய கருத்தை எனக்கு எப்படியாகிலும் புரியவைக்கமுடியும் என்று.எது எப்படியோ ஒருசில விடயங்களில் என்ன பாடுபட்டும் என்னை அவரால் இதுவரை மாற்ற முடியவில்லை!

0 comments

கருத்துரையிடுக