வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

நமது வழி

Posted by Thava ஞாயிறு, 9 நவம்பர், 2008

எமது வட்டத்துள் இருந்து எம்மைப்பற்றி உலகம் என்ன சொல்கிறது என்று சிந்தித்தோமானால் அது சிலவேளைகளில் சூனியமாகக்கூட இருக்கலாம்.எமது நடவடிக்கைகள் மற்றவர்களை சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்திருக்கின்றது என்பது பல சந்தர்ப்பங்களில் நமக்கு தெரிந்திருப்பதில்லை. இவை பற்றி எமது காதுகளுக்கு எட்டும்போது அது அதிர்ச்சியாகவும் சிலவேளைகளில் ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.எது எப்படியோ நமது வழி நேரானதாகவும் நியாயமானதாகவும் உறுதியானதாகவும் இருக்குமிடத்து எம்மைப்பற்றிய அபிப்பிராயங்களும் எமது செயற்பாடுகளின் பிரதிபலன்களும் நிச்சயம் நன்றானதாகவே இருக்கும். அபிப்பிராயங்களையே முன்னிலைப்படுத்தி எமது செயற்பாடுகள் அமைந்தால் அவ்வழி எம்முடையதல்ல!

0 comments

கருத்துரையிடுக