வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.


ஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.

தவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே! மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி ,விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்படவேண்டும் .தவறான உறவுகளை காதல் வயப்படுதல்களை தடுக்கும் வகையிலான ஆக்கங்களையோ ,ஆய்வுகளையோ விழிப்புணர்வுப்பிரச்சாரங்களையோ அவைகள் சரியான முறையில் முன்னெடுப்பதில்லை . உதாரணங்களை பட்டியல்படுத்தும் கட்டுரைகளை தான் வெளியிடுகின்றன.

மைனர்களின் லீலைகள் இன்றுமட்டுமல்ல இங்குமட்டுமல்ல அன்றும் எங்கும் நடந்தவை நடப்பவைதான் அதை குறைக்க நிறைய வழிகள் உள்ளன.  கலாச்சாரம் கலை என்பன வேறு பதங்கள் இவற்றினை இங்கு கொண்டுவந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வுகளை செய்து வர படிப்படியாக தவறான நடத்தைகள் குறையும். மனித சமூகத்தில் அதனை அறவே அழிக்கமுடியாது.

ஒன்றை நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் நடந்தபின் இன்னொருமுறை நடாவாமல் இருப்பதற்குரிய வழிசெய்யப்படவேண்டும் தவிர இப்படியெல்லாம் செய்யலாம் என்ற தகவலை வழங்குவதாக அமையக்கூடாது.

ஆனால் ஒ்ன்றை அறிந்தவுடன் அனைத்தையும் செய்தியாக்குவதில் குறியாக உள்ளன.பாதிக்கப்படுபவர்கள் குறித்து துளியேனும் கவலைப்படுவதில்லை. மாணவி அல்லது மாணவன் என்று அடைமொழி வேறு போடுவார்கள்.படங்களையும் போடுகிறார்கள். கமெரொ தூக்கியவன் எல்லாம் ஊடகவியலாளன் அல்ல.ஊடகவியலாளர்களின் போக்கை பாரக்கும் போது செய்தி ஒன்றை வெளியிடும் நேர்த்தி குறித்து எந்த ஊடக பயிற்சிமையமும் பயிற்சிவழங்குவதாக உணரமுடியவில்லை!.

வடமாகாணதேர்தலுக்காக  தயவுசெய்து தமிழினைத்தின் கற்பை விற்காதீர்கள். உண்மையில் எங்கு  இனி நடக்கும் என்று அலைவதை விடுத்து அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். காவல்துறையும் அதைத்தான் செய்கிறது.கலாச்சார(?) காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா? செய்வார்களா? தண்டணைகளும் அவமரியாதைகளும் ஒரு போதும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை!

0 comments

கருத்துரையிடுக