வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.


வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.


இருந்தபோதிலும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக  தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி வாய்ந்த வேலையாட்கள் இல்லாமை  இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. வேலை தேடுவோருக்கும் வேலைதருநர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருப்பதனை அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குரிய காரணிகளை ஆராய்ந்து வேலைதேடுவோரின் திறமைகளை வளர்த்து அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினை உறுதிசெய்யவேண்டிய கடமை சகல தரப்பினருக்கும் உள்ளது. அது அவர்களின் சுயதொழில் முயற்சியாண்மையினை வளர்ப்பதாக கூட இருக்கலாம்.

வேலைவாய்ப்பு குறைவுக்கு வெறுமனே ஒரு தரப்பினை மட்டும் காரணமாக்கிவிட்டு இருக்கமுடியாது. இந்த நிலையில் மேலே நான் குறிப்பிட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையினை  பொறுத்தவரை வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பாரம்பரிய வேலைவாய்ப்புக்களை குறைத்ததோ அதற்கு நிகராக அத்துறைசார்ந்த வேலைவாய்ப்புக்களை அதிகரித்து விட்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த இளைஞர்களையும் யுவதிகளையும் தயார்படுத்த  தனியார் துறை ஊடாக எவ்வாறு பங்களிப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதை இங்கு நோக்கலாம். தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் எளிதில் எல்லா தரப்பினராலும் அணுகப்படக்கூடிய துறையாக இருக்கின்றது. இருப்பினும் இத்துறையில் எம்நாட்டில் தங்களை வேலைவாய்ப்புக்காக தயார்படுத்துபவர்களின் எண்ணிக்கை திறமையின் அடிப்படையில் மிகக்குறைவாக உள்ளது. அதிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாக உள்ளது.அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன அவற்றிற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஓரளவுக்கேனும் முன்னேற்றலாம்

தனியார்துறையினர் தகவல்தொழில்நுட்பத்துறை தொழில் வாய்ப்புக்கள்  ஊடாக  இந்த வீழ்ச்சியினை குறைப்பதற்கும், பயிற்சிகளை வழங்குவதற்கும் இத்துறைசார்ந்த மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் எந்த வகையில் உதவலாம் என்று இங்கு சிந்திப்பது சாலச்சிறந்தது. வடக்கில் இத்துறையில் ஒரு தொழில்முயற்சியாளனாய் 14 வருட அனுபவத்தின் அடிப்படையில் எனது கருத்துக்கள் அமைகின்றன.

தகவல்தொடர்பாடல் துறைசார்ந்த தனியார் துறையினர் தமது வருடாந்த சமூக பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்மூலமும்,அவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுநிறுவனங்களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலமும் சமூகத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொடர்பிலான அறியாமை மற்றும் தெளிவின்மை தயக்கம் போன்றவற்றை போக்குவதற்கு வழிசமைக்கலாம்.


பயிற்சிகளை பொறுத்தவரை தொழில்தேடும் இளையவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பு பயிற்சிகளுக்கு தமது அனுபவங்களை நுட்பரீதியாகவும் வழிகாட்டல் போதனைகள் மூலமாகவும் வழங்க முடியும்.

பொதுவாகவே பயிற்சி என்றவுடன் கல்விசார் ஆளணியினர் மூலமாகவே பெரும்பாலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதை விடுத்து கல்வித்தகுதிக்கு அப்பால் அனுபவம் துறைசார்ந்த வல்லமை திறன் ஆகியவற்றை  அடிப்படையாக கொண்ட தனியார் துறை நிறுவனங்களின் ஆளணியினைரை சர்வதேச உள்ளுர் தொழிற்துறை வல்லுனர்களை இந்த பயிற்சிகளில் உள்வாங்குவதன் ஊடாக அர்த்தமுள்ள தொழில் சார் பயிற்சிகளை வழங்கலாம். இதன் மூலம் தொழிற்சந்தையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அல்லது சுயதொழில் முயற்சியாண்மையில் ஈடுபடக்கூடியவர்களாக  இளைஞர் யுவதிகள் மாற்றப்படலாம்.

இதைவிடவும் உள்ளகப்பயிற்சிகளை நிறுவனங்களில் வழங்குவதன் மூலமும் தனியார் துறை பங்களிக்க முடியும். ஆனால் தனியார்துறை எப்போதும் இலாபத்தினை முன்னிலைப்படுத்துவதால் அவர்களின் வணிகரீதியான செயற்பாடுகளுக்கு இவ்வாறான உள்ளக பயிற்சிகள் வழங்குகை பாதிப்பை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்கு பரஸ்பரம் நன்மை கிடைக்கும் வகையில்  பயிற்சிக்காலக்கொடுப்பனவையும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் , பயிற்சி பெறுவோருக்காக நிறுவனங்கள் தங்களை தயார் செய்யவேண்டிய வசதிகளுக்கான வளங்களையும் நிபந்தனையின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களோ அரசாங்கமோ வழங்குவதன் மூலம் உள்ளக பயிற்சியின் ஊடாக உலகத் தரமான திறன்மிக்க மனித வலுவை வெளியீடாக பெறமுடியும்.


இதைவிட அரசாங்கமானது , தனியார்துறையினருக்கான வசதிகளை அதிகரிப்பதன் மூலமும், தொழில்பாதுகாப்பினை அனைவருக்கும் சமமானதாக்குவதன் மூலமும் , தனியார்துறைக்கும் அரசதுறைக்குமான வசதிகளில் இடைவெளியினை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதன்மூலமும் , தங்கள் திறனை வளர்த்தால் தான் தங்களுக்கான வேலைவாய்பு உறுதிசெய்யப்படும் என்பதை இளையவர்களுக்கு உண்ர்த்துவதற்கு முன்வரவேண்டும்

அத்துடன் தொழில்திணைக்களம் அரச கட்டமைப்புக்கள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான திணைக்களங்களின் கட்டமைப்புக்கள் வணிக முயற்சிகளுக்கான அரச ஆதரவுகள் கடன் திட்டங்கள்  அவற்றின் சேவைகள் இன்னும் இலகுவாக்கப்படவேண்டும். அரச கட்டமைப்புக்கள் யாவும் கணினிமயப்படுத்துவதன் மூலம் அரசிற்குள்ளும் தனியார்தறையிலும் தகவல்தொழில்நுட்பத்துறைசார் வேலைவாய்ப்புக்கள் மேலும் வலுப்பெறும்.


இதன்மூலம் தனியார்துறையின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும். தனியார்துறையினரும் உற்சாகமாக வேலைவாய்ப்புக்களை அதிகரித்து தங்களை மேம்படுத்தும் அதே வேளை வேலைவாய்ப்புக்களையும் உறுதிசெய்து கொள்ள வழிசமைக்கலாம்.


அரசாங்க துறையுடன் ஒப்பிடும்போது இலங்கையினை பொறுத்தவரை சவால்கள் மிக அதிகம். இதனால் தொழில்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் உள்ளகப்பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் தனியார் துறை பின்னடிக்கின்றது. அத்துடன் வருகின்ற வேலையாட்கள் திறன் குறைந்தவர்களாகவும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவினை மட்டும் கொண்டவர்களே அதிகமானவர்களாகவும், சான்றிதழ்களில் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் அவர்களின் உண்மையான தொழிற்திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.


தொழில்நுட்பக்கல்லுாரிகளில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் கூட பரீட்சைகளை மையமாக கொண்ட பெறுபேறுகளை கொண்டவையாகவும் தற்போதுள்ள தொழிற்சந்தையினை  எதிர்கொள்ள முடியாதனவாகவும் உள்ளன. அந்தப்பயிற்சிகள்  குறிப்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சிகள் தமது தரத்தினை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயத்திலும் உள்ளன.


தகுந்த பயிற்சிகள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பினை அதிகரிக்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்படமுடியும்.

இலங்கையின் வடக்கினை பொறுத்தவரை போரினால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு மீண்டெழுகின்ற பிராந்தியமாக உள்ளது. அத்துடன் தனக்கே உரிய பாரம்பரிய மனநிலையான அரச பணி செய்ய வேண்டும் என்பதை நோக்காககொண்ட சமூககட்டமைப்பாகவும் காணப்படுகின்றது.

தற்போது உட்கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விட்டாலும் இன்னும் முடிவுறுத்தப்படாத சில அடிப்படைப்பிரச்சனைகளும் உள்ளன. இவற்றுக்கிடையில் தமது வேலையில்லாப்பிரச்சனைக்கும் இளையவர்கள் முகம் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். அத்துடன் போரில் பாதிக்கபட்ட பலர் தொழில்வாய்ப்பினை தேடியவண்ணம் உள்ளனர் இவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள தயக்கத்தை நீக்கி அவர்களுக்கும் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் தகுந்த தொழிற்பயிற்சியினை வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.

நிறைய நிறுவனங்கள் இங்கேயே ஆரம்பிக்கப்பட்டு அடுத்தநிலைக்கு செல்ல முடியாமல் உள்ளன. புதிய முதலீடுகளை வெளியில் இருந்து தருவிக்கும் அதேவேளை ஏற்கனவே உள்ள நிறுவனங்களை மேம்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது.அவற்றுக்கான திறன் மேம்மாட்டு பயிற்சிகள் மூலதன நிதி மற்றும் வளங்களை அதிகரிப்பதற்கான உபகரண உதவிகள் தேவைப்படுகின்றன அதன்மூலம் அவற்றினை மேம்படுத்தி உலகத்தரம்வாய்ந்த சேவைகளை வழங்கக்கூடியவர்களாக மாற்றலாம். அவர்களுக்கான சந்தையினை விரிவாக்கலாம் அதன்மூலம் நம்பகரமான நீண்டகால வேலைவாய்பினை உறுதி செய்யமுடியும். அதை விட படிப்படியாக சமூகக்கட்டமைப்பில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பிலான  பாரம்பரிய மனநிலைகளை மாற்றவும் வேண்டிய தேவை உள்ளது.


வடக்கினை பொறுத்தவரை தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை இரண்டு வரையான தேவைகள் உள்ளன. நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேசதரச்சந்தைக்கு உரிய சேவைகள் தயாரிப்புக்களை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த தகவல் தொழில்நுட்ப வேலையாட்கள் பற்றாக்குறை ஒருபுறமும் ,  புலம்பெயர்ந்து சென்று  அங்குள்ள பெருநிறுவனங்களில் வேலை செய்து  மீள தம் தாய்நிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது தென்பகுதியில்  பெருநிறுவனங்களில் வேலை செய்தவர்கள் அதே சம்பள அளவுகளில் தொழில் வாய்ப்பினை  இங்கு பெற்றுக்கொள்வதற்கோ உரிய பெருநிறுவனங்கள் போதுமானதாக இல்லாமையும் காணப்படுகின்றது. இந்த இடைவெளி நீக்கப்படவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை கல்வி நிறுவனங்கள் இன்னும் தங்கள் தரத்தினை மேம்படுத்தவேண்டிய தேவையில் உள்ளன.அனைத்து பாடநெறிகளும் பொதுக்கட்டமைப்பின் ஊடாக சரியாக நெறிப்படுத்தப்படவேண்டும். பிரபல தனியார் தேசிய கல்வி நிறுவனங்கள் கூட தமது கிளைகளை இங்கு பரப்பினாலும் அவர்கள் தங்கள் போதானாசிரியர்களின் தரத்தையோ பாடநெறிகளின் தரத்தினையோ சரியாக பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தனியார் துறையினருக்காக திறன்விருத்தி பயிற்சிகள் பெரும்பாலும் தென்னிலங்கையில் அல்லது தலைநகரினை மையப்படுத்தியே நடைபெறுவதால் தமது அலுவல்களை விட்டு அப்பயிற்சிகளுக்கு அங்கு பயணிக்கும் நிலையில் இங்குள்ளவர்கள் இல்லை அவையனைத்தும் வடக்கிலும் நடாத்தப்படவேண்டும்.

வேலைவாய்ப்பிற்கான  தேவையும் அதற்கான மனிதவலுவும் தேவையான அளவு இருந்தபோதிலும் வேலையாட்களின் திறன் மற்றும் அவர்களை உள்வாங்கக்கூடியளவிலான  சிறிய நடுத்தர நிறுவனங்கள் மீதான முதலீடுகளை கவரக்கூடிய வகையிலான உட்கட்டுமானம் மேலும் வளப்படுத்தப்படவேண்டியுள்ளது.

குறிப்பாக.வடக்கில் இருந்து வெளிப்பிராந்தியங்களுக்கான போக்குவரத்திற்கான நேரத்தை மிச்சப்படுத்த உள்ளுர் விமானநிலையமோ சர்வதேச விமான நிலையமோ வடக்கில்  இயங்கவேண்டிய தேவை உள்ளது. அதன்மூலம் சர்வதேச வளவாளர்களின் வருகை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் கவரக்கூடிய நிலை உருவாகும்.

சுயதொழில்முயற்சியாண்மை , புதிய பிராந்திய ரீதியிலான மற்றும் உலகளாவிய வணிகத்திட்டங்களை உருவாக்கல் குழு முயற்சிகளை எல்லாமட்டத்திலும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் வடக்கின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு சந்தையினை விரிவாக்கலாம். 

தனியார் துறையில் தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த நிறுவனங்களின் பிராந்திய குழுமங்களை பலப்படுத்தி  தரம் , வேலைவாய்ப்பு நடத்தை ஒழுங்குகள் , திறன்விருத்தி  ,புதிய புத்தாக்கங்கள் ஆகியவற்றில் அவற்றின் நடவடிக்கைகளை  ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது.அத்துடன் தரமான தொழிற்கல்வியையும் உறுதி செய்யவேண்டியுள்ளது.
சகல தரப்பும் ஒன்றிணைந்தால்  இது சாத்தியமே.

.முற்றும்.

Startup Weekend Jaffna

Posted by Thava வெள்ளி, 22 செப்டம்பர், 2017 0 comments

மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா  என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.

#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே

எந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம்? அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா? அது அவசியமானதா? ஆபத்தான பக்கவிளைவுகள் அற்றதா? அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது? அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா? அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா? ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ? அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம்? எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா? அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செய்ற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்தமுடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரியான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.

வங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.

இந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர்.திறகை்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்

பங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம்  ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த புறோகிராமராக இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.


அவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.


Startup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட

சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும்  கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .Techstar சார்பாக அதன்  பிரதிநிதி  ஒருவர் வளவாளராக கலந்து கொள்வார்.

புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.


கலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு

இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்வு இலங்கையில் 5 இடங்களில் நடைபெற்றுள்ளது. 6வது நிகழ்வு மீண்டும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும்

1ம் நாள் (6.00pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய குறிப்பிட்ட Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள்  குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் நேர அட்டவணையின் அடிப்படையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்

2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்

3ம் நாள் மாலை (9am -9pm)
ஒவ்வொரு குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3-5 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்

எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
1) http://go.startupweekend.org/Jaffna2017 (இணையவழி)
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்
3)முன்பதிவுகளுக்கு


பங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்

  1. Startup ஒன்றினை  ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
  2. பல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
  3. தொழில்முனைவோருடையான தொடர்புகள்
  4. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
  5. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
  6. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
  7. – நிகழ்வின்போது பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதிவழங்கப்படும்
  8. – பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை  பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
  9. – பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்

மேலும் தகவல்களை இங்கு பெறலாம்
1)http://go.startupweekend.org/Jaffna2017
2)https://www.facebook.com/StartupWeekendLK
3) http://startupweekend.org/attendees

My Entrepreneur Story Part 1

Posted by Thava செவ்வாய், 25 ஏப்ரல், 2017 0 comments

I started my Company (Speed IT net) virtually 14 years ago in 2003 .When I Start Technology #Startup company ,I don't have much money,My Investment was Rs 20,000 Value Credit card which was given by bank against my mother's Rs 25 ,000 Fixed Deposit.No other Help like now.
I worked in a company as Programmer for LKR 3000 before start the company.then left from there and moved to another company as senior programmer for LKR 9000 untill 2005.
Still I am wondering about my colombo life
- Few Floppy Diskettes
- Windows 98 OS Pentium III Computer
- Net Cafe for Internet Usage
- Room for Rent @ Colombo
When I launch my company physically @ Jaffna in 2005, I focused on Internet Based Development. At that time Web based Development was New to Jaffna.So many nights was left at my office alone.
We served for thousand of Clients locally and internationally. Developed Hundred of Sites, lot of Offline Online applications and trained significant amount of people. Taught ICT for hundred of students. I have not finished my journey yet.
However I proud to have Goodwill and Satisfaction rather than bank balance. I gave Opportunity for youths for their career path at our Company. Few of them misused lot of them used for good.Still I need to be settled in more things.I need to own few important things. But I never going to give up my journey.,I love my passion as #Entrepreneur ,even I could not earn big money and passed so many risk borders.
Keeping Honesty is big challenge for Business.I Lost money to save my words. Lost money for my non profit activities. But Still My Company Exist.
Nowadays there are so many Startup Eco Systems. Investment Opportunities,Degree Certificates,Technology resource Improvements. but Still People protesting for Government Job..

March 10,2017
நேர்முகத்தேர்வில் தகுதி பார்ப்பதில் தவறில்லை.
பரீட்சை முடிவுகள் எப்போதும் சரியான திறன் பெறுபேறுகளை கொடுப்பதில்லைதான் இதற்கு மாற்றீடான பொறிமுறைகள் அவசியம்

கா.பொ. த உயர்தரத்தில் வரும் புள்ளிகளை மட்டும் வைத்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் வேளைகளிலும் பல மாணவர்கள் கூறுகின்றனர். உண்மையில் வெளிய தவறிநிற்கும் மாணவர்களில் பலர் உள்செல்லும் மாணவர்களை விட திறமையானவர்களாயிருந்தும் பரீட்சைகளில் கோட்டை விடும் சந்த்ப்பங்கள் நிறைய உண்டு தானே. 

எல்லா இடமும் பிரச்சனைதான். இந்த கல்விக்கொள்கைகள் பரீட்சைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும். பின்லாந்து முறை இங்கு கொண்டு வந்தால் மிக மிக நல்லது


March 9 2017
கோழி வளர்ப்பு, விவசாயம் ,கால்நடை வளர்ப்பு ,மீன்பிடி இவை எல்லாம் பட்டதாரிகள் செய்யக்கூடாத வேலைகளாம், சுயதொழில் செய்பவன் எல்லாம் இழுக்கானவனாம் நாடகம் போடுகினம் பல பட்டதாரிகள் இப்படி நிறைய வேலைகள் செய்து முன்னேறியுள்ளனர். உயர்தரத்துடன் எந்தவித மூலதனமும் இன்றி என்னால் ஒரு தொழில்முயற்சியாளனாய் வரமுடிந்தது.இப்படி நிறையப்பேர் உள்ளனர்.என்னிடம் பல பட்டதாரிகள் வேலைகேட்டு வந்தனர் ஆனால் அவர்கள் அந்த வேலைக்குரிய தகுதியை சிறிதேனும் கொண்டிருக்கவில்லை. அறிவுரை கூறி அனுப்பினேன்.ஆனால் உயர்தரத்துடன் வந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பட்டம் வேலைக்கான அளவுகோல் அல்ல என்று அறியாத படித்த முட்டாள்களை நினைத்து அருவருப்பாக உள்ளது.இவர்கள் மக்கள் சேவை செய்ய பொருத்தமானவர்கள் என்று எவ்வாறு கருதமுடியும்.உண்மையில் உயர்தரத்துடன் பரீட்சைகள் ஊடாக அரச பணி செய்பவர்களின் தரத்தை விட நியமனத்தின் ஊடாக வந்தவர்கள் திறன் குறைவே.விதிவிலக்குகள் உண்டு. பட்டதாரிகள் எல்லோரும் திறனற்றவர்கள் அல்லர். அவர்களிலும் நிறைய பேர் திறமையானவர்கள் அவர்களில் பலர் போராடவில்லை ஒரு வேலை செய்து கொண்டு நல்லதொரு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
எக்காரணம் கொண்டும் நேர்முகத்தேர்வோ அல்லது பரீட்சைகள் வைக்காமலோ நியமனங்கள் வழங்கக்கூடாது. நேர்முகத்தேர்வில் குறிப்பாக மக்கள் பணி செய்வதற்கான நேர்மை சேவை மனப்பாங்கு உள்ளதா என்பதும் தொடர்பாடல் முறைகளும் பரிசோதிக்கப்படவேண்டும். இப்ப இங்க கருத்துபதிய சில பட்டதாரிகள் வருவினம் அவர்களின் மொழிநடை விளக்கங்களில் இருந்து அவர்களின் அறிவை மக்கள் சேவைக்கான பொருத்தப்பாட்டை மதிப்பிட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே.

வேலை அனைவருக்கும் தேவை ஆனால் போராடும் போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்கள் அவர்களின் நேர்மையினை கேள்விக்குள்ளாக்குகின்றது. அது தான் வருத்தம் இந்த எண்ணங்கள் உயர்சாதி தாழ்ந்த சாதி மனநிலைகள் போலவும் ஆண்டான் அடிமை கருத்தியல்போலவும் காணப்படுகின்றது இவர்கள் எப்படி சாதாரண பொதுமக்களுக்கு நல்லெண்ணத்துடன் நேர்மையாக பணிபுரிவார்கள்? அரச அலுவலகங்களில் கல்வித்தரம் குறைந்த சாதாரணமக்களால் எதிர்கொள்ளப்படும் அவலங்களை நேரடியாக கண்டவன் நான். அவை எமக்கு நிகழும்பொது எம்மால் வாதாடி பெற முடிகிறது ஆனால் அவர்களால் முடிந்திருப்பதில்லை பாவம் இந்த மக்கள். தங்கள் வரிப்பணத்தை கொடுத்துவிட்டு சேவைகளுக்காக அலைகிறார்கள்.
தற்போது இந்த பட்டதாரிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பதன் காரணம் அவர்களின் கோரிக்கையின் தன்மைதான் மற்றப்படி எதிர்ப்பில்லை. எங்கள் வரிப்பணத்தில் அரசபணிசெய்யவரும் அலுவலர் அதற்குரிய தகுதியுடன் வரவேண்டும் என ஒரு குடிமகன் நினைப்பதில் தவறில்லைதானே

பில்கேட்ஸ் ஆரம்பத்தில் ஒரு பட்டதாரி இல்லை மார்க்கூட பட்டதாரி இலலை. அதே நேரம் நிறைய பட்டதாரிகள் தொழில்முயற்சியாளர்களாக உள்ளனர் அவர்களை மதிக்கின்றேன்.பொட்டிப்பரீட்சைகள் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொண்டு வேலைகளை பெற்றவர்களை மதிக்கின்றேன்

படிச்சா வேலை தரவேணும் என்பது பிழையான வாதம் . கல்வி கரையில வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கலாம் திறமைக்குத்தான் வேலை தவிர சான்றிதழுக்கு அல்ல. சான்றிதழ் வைத்திருப்பவர்களில் 50 வீதமானவரிடம் அதற்குரிய தகுதி இல்லை. நேரடியாக ஒப்புகொள்கின்றனர்.
இரக்கப்பட்டு கொடுக்கிற விடயம் அல்ல வேலை (அதுக்கு பெயர் வேற). வேலையும் வேணும் அத அரசவேலையாகவும் வேணும் என்று கேட்பதுதான் தவறு. விரும்பினீங்க போட்டி போட்டு வாங்க. வெற்றிடம் இருக்கு ஆட்களை போட்டிப்பரீட்சை வைச்சு எடுங்க நேர்முகத்தேர்வு வைச்சு எடுங்க என்று போராடுங்க அதவிட்டுட்டு நேரடியா துாக்கி தா என்பது சப்பை வாதம்

March 2 2017
கேப்பாப்பிலவு மக்கள் தங்களுக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கேட்கவில்லை தங்கள் காணியை விட்டால் விவசாயம் செய்து பிழைக்கின்றோம் என்று கேட்டார்கள் விடாது போராடினார்கள் ஆனால் இங்க #பட்டதாரிகள் நாள் எண்ணிபோராடுறது எதற்காக? பரீட்சை வைக்காம பரிசோதிக்காம அரசவேலை தா என்கிறார்கள். கனவுகாணலாம் ஆனால் கேப்பாப்பிலவுடன் ஒப்பிட்டு கனவு காண்பது தவறு.

March 2 2017
றோட்டில இருந்து அரசியல்வாதிகளுக்கு சமைச்சுக்குக்கொண்டு இருக்கிற ஆட்கள் ஒரு நல்ல சாப்பாட்டுக்கடை போட்டா 50 பேருக்கு வேலை கிடைச்சமாதிரி இருக்கும்.உண்மையில் இன்று வேலையும் அரசாங்கமே தரவேண்டும் என்று #பட்டதாரிகள் போராட துாண்டியது இந்த அரசியல்வாதிகள்தான்

ஆரம்பத்தில் இருந்து மக்கள் பணத்தில் இலவசக்கல்வி வழங்கப்படுவதே உங்கள் சொந்தக்ககாலில் நின்று உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்தி நாட்டுக்கு ஏதாவது செய்யுங்க என்றுதான் இ்ப்பிடி அவர்களின் வாக்கு வங்கிக்காக துாண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு சோறு அவிச்சு போடவல்ல.

எந்தவித பெரிய முதலீடும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட சிறிய முயற்சிகள் தான் இன்று பெரு விருட்சங்களாக உயர்ந்துள்ளன.

இருந்தாலும் அரசு நிறைய சுயதொழில் முயற்சிக்கடன்களை வழங்கிவருகின்றது அத்துடன் புதுத்தொழில் முயற்சிகளுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்கிறது. அரசாங்
க வேலை தான் வேணும் என்றுகேட்பதில் தப்பில்லை ஆனால் எந்தவித பரீட்சைகளும் இன்றி சான்றிதழுக்கு வேலை தருமாறு கேட்பது மிக மிக அபத்தமானது..

வேலை கொடுக்க நிறைய தனியார் துறையினர் தயார் ஆனால் குறித்த வேலைகளை செய்யக்கூடிய தகுதியுடன் அவர்கள் உள்ளனரா என்பது கேள்வி? வெறும் பட்டச்சான்றிதழை மட்டும் ஆதாரமாக வைத்த வேலை எந்த நிறுவனமும் கொடுக்காது.


 ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றுங்கள் வெற்றி பெறுங்கள் வேலையினை பெறுங்கள் சாதாரண பொது அறிவு இல்லாத பட்டதாரி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியாது. அரச வேலை இல்லை எ்னறால் நல்ல தனியார் கல்வி நிலையத்தை நிறுவி உங்கள் வேலையினை உறுதிப்படுத்துங்கள் நன்றாக படிப்பித்தால் எந்த மூலைக்க என்றாலும் தேடி போய் பணம் கொடுத்து கற்க மாணவர்கள் தயார்

குழறுபடி இருந்தால் அதற்கெதிராக போராடலாம் ஆனால் பரீட்சையின்றி வேலை தா என்று கேட்பது அநியாயம். மற்றது தேசியகல்வியல் கல்லுாரி ஆசிரியர் கல்விக்கான் நிறுவனம் அதில் நியமனம் வழங்குவது ஆசிரியர் பயிற்சி முடிந்தவர்களுக்கான நியமனம் . பல்கலைக்கழகப்பட்டம் ஆசிரியர் தரத்திற்குரிய கல்வியல்ல அதற்கு மேலதிகமா B.Edu செய்திருந்தால் வழங்கலாம்

பலர் இலக்கின்றி பட்டப்படிப்பில் ஈடுபடுவதும் பட்டம் கிடைத்தால் நியமனம் கிடைக்கும் என்று நினைத்து படிப்பதும் தான் பிரச்சனை

இங்கு ஆதரவு தரும் அரசியல்வாதிகள் கட்சி அலுவலகத்திற்கும் தங்கள் அலுவலகங்களுக்கும் வேலையில்லா பட்டதாரிகளை அழைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். அவர்களுக்கு தங்கள் வாக்கு வங்கி பிரச்சனை

நான்போட்ட பதிவுகளுக்காக ஒரு பல்கலைக்கழக பட்டதாரி தம்பி உள்பெட்டியில வந்து துாசனத்தில பேசுது இப்பதான் விளங்குது பட்டம் எதற்கு வழங்கப்பட்டிருக்கு என்று அவர்களுக்கு எங்கள் வரிப்பணத்தில் வேலை வழங்கினால் அரச சேவை எப்படி இருக்கும். அரச சேவை பெறும் மக்கள் எப்படி பேச்சு வாங்குவார்கள் என்று எண்ணி வியக்கின்றேன். தேவைஏற்படின் முழுவிபரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்படும். பொதுவெளியிலும் பகிரப்படும். எனக்கும் துாசணம் தெரியும் ஆனால் என்னைத்தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. முதலில் மற்றவர்களுடன் நாகரீகமாக பேசப்பழகுங்கள் பிறகு வேலை கேட்பம்

February 28 2017
வேலையற்ற #பட்டதாரிகள் போராடிய செய்தி தேடினால் சிம்பாவே, நபீபியா ,இலங்கையில் மட்டுமே அறியக்கிடக்கிறது. பட்டம் தந்தா வேலையும் கொடுக்கோணும் என்பது அரசியல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாக்கு வங்கி சந்தைப்படுத்தல் முறைமை. அரசு இந்த முறையினை ஒழிக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் போட்டிப்பரீட்சை வைப்பதே நல்லது. திறமையிருந்தால் வேலை நிச்சயம் கிடைக்கும். நிறைய இடத்தில் வேலை இருக்கு அதற்கு திறைமையானவர்கள் இல்லை.

முழுமையான பதிவுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவை.



மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா  என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.

#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே

எந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம்? அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா? அது அவசியமானதா? ஆபத்தான பக்கவிளைவுகள் அற்றதா? அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது? அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா? அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா? ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ? அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம்? எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா? அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செய்ற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்தமுடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரியான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.

வங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.

இந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர்.திறகை்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்

பங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம்  ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த புறோகிராமராக இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.


அவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.


Startup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட

இலங்கையில் Startup Weekend முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படுகின்றது. அதனை நடாத்துவதற்கு முனைந்த ஏற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது முயற்சியால் இது சாத்தியமானது. இந்த நிகழ்வின் முன்னணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சரண்யன் சர்மா முன்பே வெளிநாட்டில் அவ்வாறானதொரு நிகழ்வில் பங்கெடுத்திருந்தமையால் இதனை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என்று அவா கொண்டிருந்தார் இந்நிலையில் அண்மையில் உதயமாகிய  வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை சம்மேளனத்தின்(NCIT)  இயக்குனர் சபையின் முதலாவது கூட்டத்தில் இயக்குனர் சபையில் ஒருவரும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சுயதொழில் முயற்சியாளருமான ”சரண்யன்” அவர்களால் இந்த நிகழ்வை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக எடுத்த முயற்சி உத்வேகம் பெற்றது.  அதன்பின் NCIT அமைப்பின் இயக்குனர் சபையில் இருந்து தவரூபன் , பிரசாந்தன் ஆகியோர் ஏற்பாட்டுக்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டனர்.

அந்த அமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு சர்வதேச நிகழ்வினை நடாத்தவேண்டும் என்ற கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டவேளையில் அதை சரண்யனின் மேற்படி முயற்சியினை வெற்றிகரமாக்குவதன் மூலம் நடாத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் ICTA அமைப்பினால் இந்நிகழ்வு நடாத்தப்பட முயற்சி எடுக்கப்பட்டிருந்த வேளையிலும் அது வெற்றியளித்திருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது  ICTA , FITIS ,Slasscom, ISOC இலங்கை ஆகிய அமைப்புக்களும் இணைந்து இந்த நிகழ்வுக்கு பங்களிப்புக்களை வழங்கிவருகின்றன.

இது இலங்கைக்கான முதலாவது சர்வதேச Startup நிகழ்வு என்ற நிலையில் இதனை ஏன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு இடையில் போரினால் பாதிக்கப்பட்டிருந்து மீண்டெழும் நகரங்களில் ஒன்றானதும் இலங்கையின் முன்னணி நகரங்களில் ஒன்றானதுமான யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்வை நடாத்துவது அந்த பிராந்தியத்தில்  Startup கலாச்சாரத்தினை வளர்த்து புதிய தொழில்முயற்சிகளைஆரம்பிப்பதற்கும்  வழிவகுக்கும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. எதிர்காலத்தில் இந்த நிகழ்வு இலங்கை முழுவதும் முக்கிய நகரங்களில் நடாத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இலங்கையின் முதன் நிகழ்வு என்பதால் ஆரம்பமே அமர்க்களமாக நடாத்துவது நல்லது என்று ஏற்பாட்டுக்குழு முடிவுசெய்து நிகழ்வு நாளை நெருங்கிக்கொண்டுள்ளது.

இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகிறது .Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக்” கலந்துகொள்கிறார்.

புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.


கலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு

தற்போதைய கட்டணவிபரம் 50$ ஆகும் (இலங்கை ரூபா 7500/- ). மாணவர்களுக்கு 50% கழிவுடன் விசேட சலுகை விலை உண்டு.அதே வேளை இறுதி நாள் நிகழ்வுக்கு மட்டும் கலந்து கொள்ள கட்டணம் 20$( 3000 ரூ) . அமைப்பு ரீதியான குழுக்கொள்வனவுக்கு சலுகை உண்டு. ஏற்பாட்டாளர்களுடன் ( 0777 563213 ) தொடர்பு கொள்ளவும். 100 பேருக்குத்தான் இட ஒதுக்கீடு செய்யப்படமுடியும் எனவே முன்கூட்டியே உங்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்

Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும்


1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்

2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்

3ம் நாள் மாலை (9am -9pm)
10 குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்

எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
1)https://startupweekend.org/locations/asia/lk (இணையவழி)
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்


பங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்

  1. Startup ஒன்றினை  ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
  2. பல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
  3. தொழில்முனைவோருடையான தொடர்புகள்
  4. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
  5. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
  6. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
  7. – பங்குகொள்ளும் அனைவருக்கும் LK Domain Registry ஒருவருடத்திற்கான இணையத்தளபதிவு  Hosting ஆகியவற்றை இலவசமாக வழங்கும்
  8. – நிகழ்வின்போது SLT நிறுவனம் பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதியை வழங்கும்
  9. – பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை  பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
  10. – பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்

மேலும் தகவல்களை இங்கு பெறலாம்
1)http://up.co/communities/events/9140
2)https://www.facebook.com/StartupWeekendLK
3) http://startupweekend.org/attendees
4) http://www.ncit.lk



தமிழக தேர்தல் குறித்து எனது நிலைப்பாட்டினை சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தவனாக இருந்தாலும் அதுவிடயத்தில் கருத்து சொல்ல காரணம் இதுதான். எமது ஈழப்பிரச்சனையினை குறிவவைத்தே பலவேளைகளில் தமிழக அரசியலில் அது சட்ட மன்ற தேர்தலாக இருக்கட்டும்.நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

அதே போல தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக இருக்கட்டும் ஈழப்பிரச்சனையாக இருக்கட்டும் அது குறித்து அமைப்புக்கள் உருவெடுப்பது அரசியலுக்ள் உள்நுழைவதற்கானதாகவே இருந்திருக்கிறது. அது ஆரம்பத்திலேயே எம்மால் உணர முடியும். ஈழத்தமிழருக்கான பல்வேறு கட்சிகளின் அமைபப்புக்கள் , அன்னசாரேவின் ஊழலுக்கெதிரான போராட்டம், நாம் தமிழர் அமைப்பு , கூடங்குளம் அணுமின்னிலையத்திற்கு எதிரான உதயகுமாரனின் போராட்டம் அனைத்தும் எனது எண்ணவோட்டத்தில்  ஆரம்பத்திலேயே அரசியலுக்கான அத்திவாரமாக தெரிந்தன. ஆனால் கடைசியில் அதுதான் நிகழ்ந்தது. ஆனால் இது ஒன்றும் தவறானதாக எனக்கு படவில்லை.அது யதார்த்தமானதே  அரசியலும் மக்கள் எழுச்சிகளும் பிரச்சனைகளுக்கெதிரான கருத்துருவாக்கங்களும் இறுதியில் அரசியலில் தான் சங்கமிக்கின்றன. நடிகர் சங்கங்கள் கூட அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கூடியதே.

அவ்வாறே சீமானின் நாம் தமிழர் கட்சியின்  ஈழத்தமிழர் குறித்த அக்கறை தமிழ்த்தேசிய அக்கறை பன்னாட்டு நிறுவனங்களுககு எதிரான கொள்கை சாதி மதச்சார்பற்ற கொள்கைகள் 100 வீத எதிர்பார்ப்புகள் அற்றது என்று கூறி விடமுடியாது.மற்றைய கட்சிகள் போலவே அவர்களும் ஆட்சி கிடைத்தால் சில விடயங்களில் கொள்கைகளுக்கு மாறாக அவற்றை மாற்றிக்கொள்ள சந்தர்பங்கள் இல்லை என்று அடித்து கூறிவிடமுடியாது.

அதே போல மக்கள் நல கூட்டணியை சேர்ந்தவர்களும் , நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் ஈழத்தமிழர் போராட்ட அடையாளங்களை பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் அதிமுக திமுக போன்றவை அந்த அடையாளங்களை பயன்படுத்துவது ஒப்பீட்டில் குறைவு அவர்கள் தங்கள் கட்சித்தலைமைகளின் மீதான தனிமனித வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு அது தேவைப்பட்டிருக்காமல் போயிருக்கலாம்.அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையினை தமக்கு பயன்படுத்துவதும் ஒப்பீட்டளவில் குறைவு.அருந்தபொழுதிலும் சரிவுகளை நிமிர்த்த பயன்படுத்தி வந்துள்ளனர்

தமிழகத்தால் ஈழத்தமிழருக்கு தமிழீழம் வாங்கித்தரமுடியாது என்பது  வெள்ளிடைமலை. இதற்காக தமிழக அரசியல்வாதிகளின் மக்களின் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை உணர்வுகளை அரசியல் நகர்வுகளை முழுவதுமாக கொச்சைப்படுத்தி விடவும் முடியாது. அவர்கள் யாதார்த்தத்திற்கு மேலான உணர்வுகளை கொண்டிருப்பதும் உண்மை. ஆனால் அந்த வேளைகளில் அந்த உணர்வினை தம் நாட்டு விடயங்களில் காட்டுவதில்லை காரணம் அது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது.அந்த இடத்தில் அவர்கள் ஒற்றுமை

சரி இப்ப இந்தத்தேர்தலில் யார் ஆதரிக்க சிறந்தவர்கள் என்ற  கேள்வி எழும்போது சாத்தியங்கள் அல்லாத சில விடயங்கள் கொண்டிருந்தாலும் எமது விடுதலைப்போராட்டத்தில் தலைமையால் முன்னெடுக்கப்பட்ட கட்டமைப்புத்திட்டங்களை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டும் தமிழனுக்கே உரித்தான மிடுக்கு வீரம் மொழி இயற்கை பாரம்பரியங்கள் போன்றவற்றை கடைப்பிடிக்க இளைய தலைமுறையினை வளர்த்தெடுக்கும் வகையில் சலுகை அரசியலுக்கெதிரான தன்னிறைவு பொருளாதார கொள்கைககளை ஓரளவுக்கேனும் கொண்டிருக்கும் பாரம்பரிய அடிபணிவு தமிழக அரசியல்  கலாச்சாரத்தினை மாற்றுவேன் என்றும் கூறிக்கொண்டு புறப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி எனக்கு முதன்மையாக படுகின்றது.

மக்கள்நலக்கூட்டணி ஏன் தெரிவாக முடியாது என்று கேட்டால் அதில் அரசியல் அனுபவம் , மாறி மாறி க்கூட்டுவைத்த அனுபவம் தவிர நாம் தமிழர் கட்சியில் இருந்து வித்தியாசப்படும் படியான எதுவும் பெரிதாக எதுவும் எனக்கு தோற்றவில்லை. மாற்றம் என்று கருதினால் அதில் மாற்றம் தெளிவாக தெரிய வேண்டும்.

மாறி மாறி இரண்டு கட்சிகளின் கையில் இழுபட்ட அரசியலை மாற்று அணி ஒன்றுக்கு வழங்கி பார்க்க வேண்டிய தேவை தமிழக மக்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறியே.

இருந்தாலும் மக்கள் நலக்கூட்டணியைகூட சாதாரணமாக பார்த்துவிட முடியாது தேர்தலின் பின்னராவது அவர்களும் நாம் தமிழர் கட்சியும் கூட்டாக இணைந்தால் நிச்சயம் விரும்பிய மாற்றத்தினை ஓரளவுக்கேனும் மக்கள் அனுபவிக்க முடியும்.திடீரென நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நான் கனவு காண விரும்பவில்லை. நிச்சயமாக இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் இந்த தேர்தல் சவாலாகவே இருக்கும் என்பது வெளியில் இருந்தான அவதானிப்பாக உள்ளது களநிலமை தமிழக மக்களின் கையில்தான்.

இருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்

Posted by Thava திங்கள், 28 செப்டம்பர், 2015 0 comments

இளைய சமுதாயம் எதன் பின்னால் எதற்காக அணி திரள்கிறது என்பதை நினைக்கையில் தாயகத்தின், எமது இனத்தின் விழுமியங்களின் மீதான எதிர்கால நிலை குறித்து கவலை மட்டுமல்ல கண்ணீரும் வருகின்றது !
இருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்
சி்ங்கள தேசத்தில் சில நண்பர் பெற்றதற்காய்
எங்களை இவர்கள் ஏளனமாய் பார்க்கின்றார்
சிங்கள தேசத்தில் சீவித்த அனுபவம் எனக்குமுண்டு
உங்களை விட தாரளமாய் நண்பருண்டு!
உங்களை விட தாய் மீதும் தாயகத்தின் மீதும்
காயாத காதல் எனக்கும் உள்ளது-உங்களை
வழிநடாத்தும் சக்திகள் சிலவற்றை
கனவாக மட்டும் கண்டு கொள்ளலாம்.
* * *
புலம்பெயர்ந்து புதினம் பார்க்க வந்த ஒன்று எனக்கு 
”புறோட்டோகோல்” தெரியுமா என்கிறது !
கவனமாயிரும் என்று கட்டளையிடுகின்றது!
செல்லடியிலும் நான் நாட்டைவிட்டு செல்லாமல் வாழ்ந்தவன்!
வல்லமை எனக்கிருக்கு வாழ வழியிருக்கு
விசா‬ முடிய முதல் முந்தியோடபோறவன் என்னை
கூசா‬ துாக்க கூப்பிட முடியாது !
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்