வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் சிறீலங்காரெலிகொம் , டயலொக் ,மொபிடெல் , லங்காபெல், சண்ரெல் நிறுவனங்கள் தமது சேவையினை வழங்கிவருகின்றன. சிறீலங்காரெலிகொம் கேபிள் தொலைபேசி இணைப்புக்களையும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கி வந்தது சண்டெல் நிலையான கம்பியில்லா தொலைபேசிச்சேவையினை வழங்கிவந்தது.டயலொக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கைதொலைபேசி சேவைகளை வழங்கி வந்தது. சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் பெறுவது சற்று கடினமாக இருந்து வந்தது அதேவேளை சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை பெறுவதற்கு பாதுகாப்பு தரப்பினரது பாதுகாப்பு அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அனைத்தும் முன்னேற்றகரமான நிலையினை எட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் போன்ற பகுதிகளில் சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் புதிதாக வழங்கப்படுகின்றன. அத்துடன் படிப்படியாக சகல பிரதேசங்களிலும் புதிய இணைப்புக்கள் வழங்கப்படுமென உறுதி தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை பெறுவதற்கான பாதுகாப்பு அனுமதி நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை மரக்கறிச் சந்தையில்கூட வாங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. சிறீலங்கா ரெலிகொம்மிற்கு போட்டியாக டயலொக் மற்றும் லங்காபெல் நிறுவனங்களும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை வழங்கி வருகின்றன. சன்ரெல் தனது சேவையில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.இந்நிறுவனம் தான் ஏற்கனவே வழங்கிய இணைப்புக்களுக்கு சேவை(?) வழங்குவதோடு மட்டும் தனது பணியை நிறுத்திவைத்துள்ளது.

இதேவேளை அகலப்பட்டை இணைய இணைப்புக்களை வழங்குவதில் சிறீலங்கா ரெலிகொம் மற்றும் டயலொக் நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றன.மொபிற்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்கள் விரைவில் தாமும் இதனை வழங்கவுள்ளதாக தெரிவித்து வருகின்றன.

தற்போது யாழ்மக்கள் முன்பாக இன்ரநெட் இற்கான தெரிவுகளாக சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்களுக்கான டயலப் இணைய இணைப்புக்கள் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களுக்கான டயலப் இணைய இணைப்புக்கள்,சீ.டி.எம்.ஏ பீ-கார்ட் டயலப் இணைய இணைப்புக்கள் ,நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்களுக்கான ADSL இணைய இணைப்புக்கள்(Broad band) மற்றும் டயலொக் நிறுவனத்தின் Broad band இணைப்புக்கள்,மொபைல் ஊடான GPRS,3G இணைய இணைப்புக்களினை பட்டியலிடலாம்.
சிறீலங்கா ரெலிகொம்மினது ஏ.டி.எஸ்.எல் Broad band மற்றும் டயலொக் நிறுவனத்தின் Broad band இணைப்புக்கள் மட்டுப்படுத்தப்படாத நிபந்தனையற்றபாவனைக்கு மாதாந்த கட்டணம் அறவிடுகின்றன இவை சாதாரண மக்களுக்கு சற்று செலவாக உள்ளது. கூடிய இணையப்பாவனை மற்றும் வர்த்தக சேவைகளுக்கு பொருத்தமானவையாக உள்ளன.

செலவு ஒப்பீடுகளின் முடிவாக சிறீலங்கா ரெலிகொம்மினது சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களில் இணையபாவனை உள்ள தொலைபேசிகளுக்கான தேவை தற்போது வாடிக்ககையாளரிடத்தில் கூடுதலாக எழுந்துள்ளதால் இவற்றினை பெருமளவில் தருவிப்பதற்கான முயற்சியில் சிறீலங்கா ரெலிகொம் ஈடுபட்டிருப்பதாகவும் இம்மாத இறுதியில் அவற்றினை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என சிறீலங்கா ரெலிகொம் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. எது எப்படியிருந்த போதிலும் ADSL இணைய இணைப்புக்கள்(Broad band) மற்றும் WiMax Borad Band இணைய இணைப்புக்களை பெறுவதில் பயனாளர்கள் முனைப்பாக உள்ளனர்.

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Posted by Thava செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009 1 comments

Article Source: KMDFAIZAL

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

Article Source: KMDFAIZAL

தகவல் தொழில் நுட்ப யுகத்தில் முடியாது என்ற சொல்லுக்கே இடமில்லை.இணையத்தளங்களை யார் தடுத்தாலும் பார்க்கலாம். இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இணையத்தளங்களை பார்வையிட www.xerobank.com இல் உள்ள இணைய உலாவியினை(Browser) பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள் .இன்று நான் இதனை பயன்படுத்தினேன் எல்லா இணையத்தளங்களும் தங்கு தடையின்றி வந்தது.

பெம்மானே பேருலகின் பெருமானே - பாடல் வரிகள்...

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இன்னோர் பாடல் ... நான் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்... வைரமுத்து ஒருவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்...

பெம்மானே பேருலகின் பெருமானே - பாடல் வரிகள்...

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

*திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: G V பிரகாஷ்
இயற்றியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்*

தாய் தின்ற மண்ணே - பாடல் வரிகள்...

சமிபத்தில் தான் ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல்களை கேட்க என் வேலை பளு இடம் கொடுத்தது... நான் செல்வ ராகவன் படங்களை விரும்பி பார்ப்பவன்... வழக்கமாக நா.முத்துக்குமார் தான் பாடல்களை எழுதுவர்... இந்த முறை வைரமுத்துவின் வைரமான வரிகளில் வந்த இந்த பாடல் என் மனதில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது... " தாய் தின்ற மண்ணே " பாடலின் வரிகள்...

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி

சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ?
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ?
மன்னன் ஆளுவதோ?

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ?பிணம் தின்னும் கழுகோ?
தூதோ? முன் வினை தீதோ?
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ?
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை..

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே!
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே!

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல் 

படம்: ராமன் தேடிய சீதை
பாடல்: இப்பவே இப்பவே
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
கண்ணை மூடி உன்னைக் கண்டால்
அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால்
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே……….

வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால்
என்ன செய்வது

பெண்:
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

ஆண்:
சொல்லித் தீரா
இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு
கூத்தாட…

பெண்:
மின்னல் கண்ட
தாழை போல
உன்னால் நானும்
பூத்தாட…..

ஆண்:
உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம்
என்னைக் காண
உன்னை நானும்

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே…..

ஆண்:
எந்தன் வாழ்வில் வந்ததின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே
செல்ல விருப்பம்

பெண்:
நெஞ்ச வயல் எங்கும் உன்னை
நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம்
இட்டு வைக்கிறேன்

ஆண்:
உன்னைக் காண
நானும் வந்தால்
சாலை எல்லாம்
பூஞ்சோலை….

பெண்:
உன்னை நீங்கி
போகும் நேரம்
சோலை கூட
தார்ப்பாலை…

ஆண்:
மண்ணுக்குள்ளே
வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

பெண்:
கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே

ஆண்:
கைவளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே

பெண்:
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே