வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.


12-7-2013
வடக்கின் முதலமைச்சர் யாரவது வரட்டும் அவர்கள் தமிழினத்தின் தனித்தலைவராகிவிட முடியாது. கூட்டமைப்பின் பேசப்படும் 2 வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கினை நிரூபிக்கவேண்டியும் உள்ளதை மறக்கக்கூடாது. முதலே அறிவிக்காமல் தலைமைவேட்பாளராக ஒருவரை நிறுத்தி பின்னர் மக்கள் விருப்ப தெரிவின் அப்படையில் முதலமைச்சரை தீர்மானிக்கலாம் என்பதே இப்போது எடுக்கக்கூடிய இராஜதந்திரம் இல்லையெனில் வாக்குகள் சிதறும்!

எனக்கு எப்போதும் சம்பந்தனின் தெரிவுகளில் சந்தேகம் இருக்கிறது. சுமந்திரனை சம்பந்தன்தான் கொண்டுவந்தவர் என்பதை மறக்கமுடியாது. அவரை மக்கள் தெரிவு செய்யவில்லை .சனநாயகம் உரிமை என்று காது கிழிய கதறும் கட்சித்தலைமை மக்களின் தெரிவையே மதிக்கவேண்டும். தேர்தலில் பெற்ற விருப்புவாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவு இடம்பெறவேண்டும். முதலமைச்சரை யாரும் எமக்கு திணிக்க முடியாது.எனது தனிப்பட்ட விருப்பை இந்த விடயத்தில் முன் வைத்து வாதாட விரும்பவில்லை.

நமது நாட்டில் அரசியலுக்கு வாரதே சாக்கடைக்கு வார மாதிரி தான் இதில் நல்லது யார் கெட்டது யார் என்று முதலே கூறுவது கடினம் பதவி கொடுத்து பார்தால் தான் சுயரூபம் வெளிப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.முடிவடுக்கும் குழுவின் விருப்பு மக்களின் விருப்புக்கு விரோதமானதாக இருக்குமெனில் அதுவும் வேட்பாளருக்கான ஒரு உரிமை மறுப்பே!

தேர்தல் அறிவித்தபடியால் இனி மகாணசபை அரசமைப்பு மாற்றங்கள் நடைபெறாது நடைபெற்றாலும் அவை இம்முறை அமுல்படுத்தப்பட மாட்டாது. இந்த முறைமட்டும் தான் இந்த மகாணசபை முறைகூட இருக்கும் அடுத்தமுறை இதற்குபதில் இன்னும் வேலைக்குதவாத கிராமசபைகள் தான் இருக்கப்பபோகி்ன்றது. நம்மட ஆக்கள் எவனும் நேர்மையானவன் இல்லை. எல்லாம் குறுகிய அரசியல் இலாபம் நோக்கியே நடைபெறுகிறது. இதில் மாவை வந்தென்ன விக்கினேஸ்வரன் வந்தென்ன டக்ளஸ் வந்தென்ன தாயா மாஸ்டர் வந்தென்ன ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாம் மன்னர் மனம் வைச்சால் தான் நடக்கும் ! ஆகவேண்டியதை பார்ப்பம்!

நான் விவாததத்தினை விரிவுபடுத்தவிரும்பவில்லை. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம் அதனுடன் ஓரளவுக்கேனும் ஒத்துப்போகும் கட்சிபற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் விமர்சிக்கும் உரிமை கொண்டிருப்பார்கள். அவற்றின் நலன் பற்றி கதைப்பார்கள் அது தான் ஜனநாயகம். எல்லோரும் அரசு கட்சிபக்கமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது தானே? அது சர்வாதிகாரம்.அதேவேளை மாற்றுக்கருத்துடையவர்களை நான் ஒருபோதும் துராகிகள் என்றும் அழைப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எவரும் புனிதர்கள் அல்லர். மத்தியில் மன்னர் நினைப்பது தான் நடைபெறும். அதுதான் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் சொல்லும் உண்மை. எவரும் குறிப்பிடத்தக்கதளவு செய்யமுடியாத ஒன்றை அல்லது இயல்பாக நாட்டு மக்களுக்கு கிடைக்காத ஒன்றை பெற்று தந்திருக்கவில்லை. அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்பதல்ல முக்கியம் மன்னர் என்ன தருவாரோ என்பதுதான் எம் முன் உள்ள கேள்வி. தேர்தலில் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள் பார்ப்போம். இந்த மக்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்

சுமந்திரன் யாரெண்டு சனத்துக்கு தெரியாது பாருங்கோ! அது சரி பேப்பர்கள் தொடங்குறது சரி வாங்கிறதுக்கு ஆட்கள் வேணுமே! இப்பதான் எல்லாரின்ர வீட்டிலையும் இணையம் இருக்கு!

15-7-2013
தமிழ்த்தேசிய அரசியலில் கிட்லராக வர்ணிக்கப்படக்கூடியவர் சம்பந்தர் என்றால் அது மிகையில்லை.வேட்பாளர்களாக நியமிக்கப்படவேண்டும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் ஏனையவர்கள் விரைந்து சம்பந்தனை சந்திப்பதே மேல். உங்கள் எம்பிமார்களால் முடியாது. மேலும் ஆங்கிலம் சட்டம் படித்திருந்தால் கை கொடுக்கும். கொழும்பில் படித்திருத்தல் வீடு வைத்திருத்தல் திருகோணமலை பூர்வீகம் எல்லாம் உதவும். நீதிபதிஉடன் நின்று பேச ஒரு தராதரம் வேன்ண்டாமா?. எது எப்படியோ கடைசியில் வாக்கு போடுவது என்னவோ மக்கள் தான்

17-7-2013
கிளிநொச்சியில் சாதாரண ஒரு தமிழ் பெண் சிங்கள இராணுவ அதிகாரியை விரும்பி திருமணம் செய்தால் துரோகி. கொழும்பில் நம்ம (முதல் அமைச்சர் )வேட்பாளர் மகன் மார் சிங்களப்பெண்களை திருமணம் செய்தால் புத்தி ஜீவிகள்! என்னங்கடா உங்க நியாயம்! சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான் நீங்க செய்தது நல்லிணக்கம் புத்தி ஜீவித்தனம் என்றால் அவள்செய்ததும் நல்லிணக்கமே!

சரி வேட்பாளர் தெரிவிலாவது ஒழுங்கா ஒரேநாளில முடிவெடுப்பீங்களா அல்லது இவன் அவற்ற ஆள் இவற்ற ஆள் துரோகி புத்திஜீவி என்று வைச்சு இழுத்து கடைசயில காதில பூ சுத்துவீங்களா? ஒன்று மட்டும் உண்மை யாழ்ப்பாணத்திலேயே நிறைய மக்கள் மனமறிந்த (இவர்கள் விரும்பும் ?)ஆங்கிலப்புலமையுள்ள சட்ட அறிவுள்ள நிறையபேர் இருக்கினம் இவையள் முன்னாள் அதிகாரிகள் பேராசான்கள் ஆனால் அவர்களை எவரும் (உத்தமரை கேட்டது போல ) போய் கேட்கமாட்டார்கள் அவர்களாக விண்ணப்பித்தால் பதவியாசை என்பார்கள் வெறுத்துப்போய் ஒரு உத்வேகத்தில் சுயேட்சையாகவோ வேறுகட்சிகளிலோ கேட்டால் துராகி என்பார்கள்.இதுதான் இன்றைய கூத்தமைப்பு அரசியல்.

ஒன்றுமட்டும் இவர்கள் உணரவேண்டும் இதையெல்லாம் பாத்துக்கொண்டிருக்கும் மக்களாகிய நமக்கு மண்டையில் பகுத்தறியக்கூடிய மூளை இருக்கிறது. நேரம் வரும்போது பதில் கூறுவார்கள்.

”புத்திஜீவி ” என்ற சொல்லை யாருக்கும் புனைபெயராக கூறமுடியாது. பகுத்தறிவுள்ள அனைவரும் புத்திஜீவிதான். இதுக்குள் ஆயர் வேறு உத்தமர் அவர் என்று அறிக்கை விட்டிருக்கிறார் அதுதான் இந்த கடுப்பு. வேட்பாளர் தெரிஞ்சது சரியெண்டால் அதோட விடடுவிடவேண்டியது தானே ஏன் அதிக பிரசங்கித்தனம் மற்றவன் எல்லாம் அயோக்கியர்களா?. ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை ” இது தான் உண்மையில் நடந்தது.

ஆயர் தமிழ்த்தேசிய அரசியலை தீர்மானிக்க முயல்வது அவ்வளவு சரியாக படவில்லை. ஆயர் அரசியல் கதைக்கலாம் என்றார் பிக்கு அரசியல் கதைப்பதிலும் தவறில்லைதானே! ஆக மொத்தத்தில் நடக்கின்ற கூத்துக்களை பார்த்தால் குருக்கள் XX விட்டால் குற்றமில்லை என்ற வாக்கியமே நினைவுக்கு வருகிறது.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் எந்த ஒரு இடத்திலும் விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என கூறியிருக்கவில்லை. அவரும் பொருத்தமான ஒருவர் தான் என்பதை ஆரம்பம் முதல் தெரிவித்திருக்கின்றேன். ஆனால் அவரை தெரிவுசெய்ய கூறிய காரணங்களும் தெரிவு செய்த பின்னரான மன்னார் ஆயர் போன்றவர்களின் அறிக்கையும் தான் கடுப்பேத்துகின்றன. விக்கினேஸ்வரன் மற்றும் மாவை கூட அமைதியாக இருக்க இவர்கள் ஆர்ப்பரிப்பதும் அவரை விட்டால் எவரும் இல்லை என்று கூற விளைவதும் நியாயமானதல்ல. இங்கு யாழ்பாணத்தில் ஒரு சிறந்த நிர்வாகியினை நிறுத்தியிருக்க முடியும் இது மாவையாக இருக்க வேண்டியதும் இல்லை. இங்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து போகின்றனர் அவர்கள் மொழிப்பிரச்சனையால் அவதிப்பட்டு செல்லவில்லை.

சாதரணமக்களுக்கு ஒருசட்டம் அரசியல்வாதிகள் என்று தம்மைக்கூறிக்கொள்வோருக்கு ஒருசட்டம் இருக்கமுடியாது. கொழும்பில் இருந்துகொண்டுதான் ஆளவேண்டும் என்ற நிலை மாற்றப்படவேண்டும்.நம்மை நாமே தாயகத்தில் ஆளவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போராட்டமும் நடபெற்றது.

இங்குள்ளவர்களை அவர்கள் அடையாளப்படுத்தப்பவில்லை அல்லது அரச ஆதரவு முத்திரை குத்தப்பட்டு விட்டிருக்கின்றனர் ஆனால் கூத்தமைப்பு உறுப்பினர்கள் அரசுடன் கொஞ்சி குலாவுகின்றனர். தமது குடும்பங்களை கொழும்பிலும் வெளிநாட்டிலும் வைத்திருக்கின்றனர்.இந்நிலையில் இங்குள்ளவர்களை அவர்கள் சாதாரணமக்களாயினும் அதிகாரிகளாயினும் அரசியல்வாதிகளாயினும் சோரம்போக்கூடியவர்கள் என்று அடையாளப்படுத்துவதில் முன்னிற்கும் ஊடகங்களும் கூத்தமைப்பின் தலைமை அடிவடிருடிகளும் தமிழ்மக்களின் எதிர்காலம் அது இது என்று கூறி ஒரு மாயையினுள் மக்களை வைத்திருக்க விரும்புகின்றனர்.ஊருகடி உபதேசம் உனக்கல்ல என்பதுதான் அவர்களது அரசியல்.

பகுத்தறிவுடன்நோக்கினால் கூத்தமைப்பு வெறும் சூனியம்தான் இதயசுத்தியுடன் நல்லதொரு விஞாபனத்துடன் நல்ல கட்டமைப்புடன் இறங்கினால் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வெல்லமுடியும.அரசு சார்பு கட்சியாகக்கூட இருக்கவேண்டிய அவசியமில்லை . அரசு கட்சிகளும் ஏதோ செய்யமுடியத அல்லது ஒரு நாட்டுமக்களுக்கு அரசு வழங்காத ஒன்றை அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கியதாக பிரச்சாரப்படுத்துகின்றனர்.

கூட்டமைப்பு மாயை நீண்டநாட்களுக்கு செல்லாது.கூட்டமைப்பும் எல்லாவற்றையும் கைவிட்டு 13ம் திருத்தத்தின் கீழ்தான் மகாணசபைத்தேர்தலில்போட்டியிடுகின்றது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இம்முறை முதல்தரம் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது பலர் அமைதியாக உள்ளனர். சகல தேர்தல்களிலும் சந்தர்ப்பங்கள் வழங்கிவிட்டாயிற்று. இது ஒன்றுதான் பாக்கி அதையும் ஆடிப்பார்க்கட்டும். அவர்கள் எமக்கு ஒரு தீர்வையும் பெற்றுத்தரமாட்டார்கள்.

இதுதான் கூட்டமைப்பினரின் அரசியல் என்றால் இனிவரும்காலங்களில் நிறைய கட்சிகள் உதிக்கும் பலர் போட்டியிடுவர் என்பதில் ஐயமில்லை.இதை எவரும் குறை கூற முடியாது.அரசியல் கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் இருந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை.அதேபோல முகப்புத்தக போராளிகளினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதுமில்லை. ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தல்களினால்மட்டும் வழிநடாத்தப்படுவதுமில்லை. இது சகல மக்களின் பங்களிப்புடன் சம்பந்தப்பட்டது.
காலம் பதில்சொல்லும் .வழமைபோல மக்களில் ஒருவனாக காத்திருக்கின்றேன் தேர்தலில் வாக்களிக்க!


உங்கள் வாதத்தினை முற்றாக மறுதலிக்கின்றேன். உங்கள் புத்திஜீவித்தனத்தினை குப்பையில் போடுங்கள் நீங்களும் நீங்கள் முன்வைக்கும் ஒருசிலரும் கொழும்பில் உள்ளவர்களும் மட்டும் தான் அரசியல் மேதாவிகள் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாதது.

சுத்திச்சுத்தி பல்கலைக்கழகத்திற்குள் மட்டும் ஆட்கள்தேடுவதும் அதனை விமர்சிப்பதும் உங்கள் வழமையாக உள்ளது. ஆளைக்காட்டு என்று கேட்கும் நீங்கள் அந்த ஆளை நியமிக்கும் திறன் உடையவராயிருக்கவேண்டும்.உங்களுக்கு நான் ஆட்கள் பிடித்தத்தரவேண்டும் என்பதல்ல. அது எனது வேலையும் இல்லை. தயவுசெய்து நீதிபதியை நியமித்ததற்கு நீங்கள் உரிமை கோர வேண்டாம் அதில் பல அந்தரங்க விடயங்கள் உள்ளன அது சம்பந்தனுக்கு மட்டுமே வெளிசச்சம். உங்கள் உப்புச்சப்பற்ற குழந்தைப்பிள்ளைத்தனமான ஊகங்களுடனான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழ்த்தேசியம் தொடர்பில் உங்களைவிடவும் மேலான அக்கறை எனக்கு உள்ளது.அதை உங்களிடம் நிரூபிக்கவேண்டியதில்லை. எனது வாதமே வேறு நீதிபதியின் வரவை எதிர்ப்பதல்ல அதை கொண்டாடும் விதம் தான் வலிக்கிறது. பிரதீப் கூறியவாறு தற்போது நாம் இக்கட்டான சூழலிலில் இணைந்து போகின்றோம் ஆனால் இப்படி தொடர்ந்து கபடி ஆடலாம் என்று கூட்டமைப்பு எண்ணுமானால் அது முட்டாள்தனமானதாக இருக்கும் மக்கள் முட்டாள்களல்ல.காலம் பதில்சொல்லும்.கொள்கை இல்லாதவர்களுடன் ஊகங்களின் அடிப்படையில் விவாதிக்க நான் தயாரில்லை

தமிழ்த்தேசியம் என்று கூறி கூட்டமைப்பு தலைவர்களால் எடுக்கப்படும் தான்தோன்றித்தனமான முடிவுகள் ஒவ்வொன்றின்போதும் ”தமிழ்மக்களின் எதிர்கால நலன் கருதி” அநுசரித்துச்செல்வோம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் கூறும் தமிழ்மக்களின் எதிர்கால நலன் அங்கு ஒருபோதும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அம்மக்களின் கருத்துக்களை மதிக்காத எதிர்கால நலன் கருதிய செயற்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானது. எதற்கெடுத்தாலும் தலைவர் செய்தார் சொன்னார் என்று அந்த ”மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக்கவரிமான்” மனிதரை உங்கள் உப்புச்சப்பற்ற தேசியத்துக்கு பக்கப்பாட்டுக்கு இழுக்காதீர்கள்.

அறிவியல் பற்றி எனக்கு பாடம் நடாத்தவேண்டாம்.புத்திஜீவித்தனம் என்று இல்லாத ஒன்றை வைத்து சிலர் பிழைப்பு நடத்தமுயல்கிறார்கள். தமக்கு விரும்பாத செயலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளைகளில் செய்யக்கூடாது என்பதற்காக பலர் தமது பதவிகளை எறிந்துவிட்டு வந்த சம்பவங்கள் நிறைய உண்டு.உதாரணத்துக்கு இந்த பயங்கரவாததடைச்சட்டத்திற்ன் மூலம் தமிழர்களை உள்ளே தள்ளுவதற்கு கருவியாக இருக்கும்போது இந்த தமிழ் தேசிய வாதி என்னசெய்தார் ? இது ஒரு உதாரணம் உண்மையில் அவரின் திறமையினையோ தெரிவையோ நான் இதன்மூலம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை.

பிரதேசவாதம் நான் பேசவில்லை. போராட்டமே பிரதேசங்களையும் இனத்தினையும் மொழியினையும் மையமாககொண்டதே.அப்படி ஒன்றும் இல்லையென்றால் கோத்தாவின் கருத்த இங்கு நிரூபிக்கப்பட்டுவிடும்.ஒரே தேசம் ஒரே நாடு என்று சம்பந்தருடன் தேசியக்கொடியை பிடிக்கலாம். அதாவது ” இலங்கை எல்லோருக்கும்சொந்தமானது எங்கும் யாரும் வாழலாம் அரசியலில் ஈடுபடலாம்” இதுதான் கோத்தாவின் வாதம். கூட்டமைப்பு தமிழீழத்தின கைவிட்டு கனகாலம் இன்னும் சிலவருடங்களில் இனத்தினையும் கைவிடும். கொழும்பில் இருந்து கொண்டு வடக்கில் வாக்குரிமை இல்லாத ஒருவர் இங்கு வடக்கு நிலமை பற்றி பேசமுடியாது. மக்களின் தெரிவுகளை மதிக்காத தான்தோன்றித்தனமான முடிவுகளால் கிழக்குமாகாணத்தில் நாம் இடைந்த தோல்வியை மறக்கவே முடியாது.

மக்களை தொடர்ந்தும் மந்தைகளாக கணிக்காதீர்கள் ”சாது மிரண்டால் காடு கொள்ளாது” சுயநலன் கருதாத ஆளுமை யாழ்பாணத்தில் இல்லை என்று கூறுவதன்மூலம் நீங்கள் உங்கள் புத்திஜீவித்தனத்தினை நிரூபித்துவிட்டீர்கள். மக்கள் பதில் சொல்வார்கள் காத்திருங்கள்

எது எப்படியோ வடமாகாணசபை தேர்தல் முடிவுற்றதும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கின்றன 13வது திருத்தினை எமது வேட்பாளர்கள் மேலோட்டமாகவேனும் ஒரு தடவை வாசித்துவைத்திருப்பது அவசியம்.

21-7-2013
மக்களின் மாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட இதர தேவைகளை நிறைவேற்ற மத்தியில் பெரும்பான்மையின அரசுடன் இணைந்து இயங்கும் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களை முன்னிறுத்தி எமக்கு உதவி வருகின்றமை என்னவோ உண்மைதான்.இவர்களும் ஒரு சிலர் தேவைதான். இருப்பினும் இவை ஒன்றும் எமக்கு கிடைக்ககூடாதனவல்ல வரிப்பணத்தில் இயங்கும் அரசு தனது நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டியதைத்தான் தாமதித்து வழங்குகின்றார்கள்

எது எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு துணிந்து அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரு உரிமைக்கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தான் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் கூத்துக்கள் பலவேளைகளில் கூட்டமைப்பினை கூத்தமைப்பாக மாற்றுவது என்னவொ உண்மைதான். இக்கட்சிக்கான மாற்றுப்புலம் ஒன்று இன்னும் ஒரு புதிய கட்சியினால் ஈடுசெய்யப்படும் வரை பெரும்பான்மையான தமிழ் மக்களின் பயணம் கூட்டமைப்பின் ஊடாக தான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.ஆனால் அதை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.

முதலமைச்சர் தெரிவில் நடந்த இழுபறிகளை விட தெரிவின் பின் வெளியிடப்படும் வர்ணனைக்கட்டுரைகள் அறிக்கைகள் தான் எம்போன்றவர்களை கடுப்பேத்திவருகின்றன.மற்றப்படி விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என்ற கருத்தை நான் கொண்டிருக்கவில்லை.இன்று தினக்குரலில் காலகண்டன் விக்கினேஸ்வரனை கடவுகளாக குறிப்பிடாதது ஒன்றுதான் பாக்கி மற்றப்படி சகல துதிபாடல்களையும் செய்திருக்கின்றார்.சாதியைக்கூட விட்டு வைக்கவில்லை.அதை அடிப்படைத்தகுதியாக வர்ணித்திருக்கின்றார்.இன்றைய பல கட்டுரைகள் ஒரே ஆளைப்பற்றியே வரையப்பட்டுள்ளன. அதன் காரணமாக நான் பல கட்டுரைகளை வாசிக்கவே இல்லை . இவ்வாறான ஒரே கருக்கொண்ட கட்டுரைகளை தவிர்க்கவேண்டும்

இதுவரை கூட்டமைப்புக்காகத்தான் மக்கள் வாக்களித்தனரே தவிர ஆட்களுக்காக வாக்களிக்கவில்லை. முதன்மை வேட்பாளர் தெரிவின் முக்கியத்துவம் அரசுக்கும் வெளியுலகுக்கும் தெரியவேண்டுமே தவிர எமது மக்களுக்கு தேவையில்லை.இப்படி ஒருவரைப்பற்றி தொடர்ந்து கட்டுரை எழுதவேண்டுமாக இருப்பின் அவரைப்பற்றி மக்களுக்கு அடையாளம் தெரியாது என்று பொருளாகிவிடும். அவர்களுக்கு யாரும் யாரைப்பற்றியும் பாடம் நடாத்த தேவையில்லை. விசனத்துடன் உள்ள அவர்களுக்கு கூட்டமைப்பு வெல்ல வேண்டியதன் அவசியத்தினை வேண்டுமானால் இனி விளக்க முயற்சிக்கலாம்.

கிழக்கில் ஏற்பட்ட கதி கூட்டமைப்புக்கு வடக்கில் ஏற்படக்கூடாது. அதை நிவர்த்தி செய்ய வேட்பாளர் தெரிவில் நிதானத்துடன் நடந்துகொண்டு வெற்றிபெற்று முதலமைச்சரைக் கூட கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க கூட்டமைப்பு முயலவேண்டும். எது எப்படியோ முடிவை நாம் தீர்மானிக்க முடியாது மக்கள் தீர்ப்பை மதிக்கவேண்டும்.

இன்றைய உதயனைப்பார்த்தால் சிவிகே மீது நேரடியாக தாக்கியுள்ளது சரியாகப்படவில்லை. ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போலவும் எதிர்பார்த்தது கிடைக்காததுபோலவும் அதனால் நொந்து எழுதியது போலவும் அந்த அரசியல் பத்தி அமைதிருக்கின்றது. ஒருதலைப்பட்சமாக இக் கட்டுரை தனிநபர் தாக்குதலாக வரையப்பட்டிருக்கின்றது வருந்தத்தக்கது.

ஊடகங்கள் நடுவுநிலமையுடன் இருந்தாலே போதும் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.ஊடகங்கள் கட்டுரைகளை பிரசுரிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. கூட்டமைப்பின் வெற்றிகளை கட்டுரைகள் கூட குழப்புகின்றன. விசனமடையும் மக்கள் தான் ஒருத்தனும் வேண்டாம் என வாக்களிப்பனை புறக்கணிக்கின்றமை கடந்து வந்த வரலாறு. இது எதிர்த்தரப்புக்கு சாதகமாகும்.

25-7-2013

தமிழ் சிவில் சமூகம் என்ற  அமைப்பின் ஒருவருடத்திற்கு முந்திய கிழக்குமாகாணம் தொடர்புபட்ட செய்தியையும் வாசித்தேன். ஆழமான தேடல்தான் ஆனால் போட்டியிடுவதெண்டு முடிவெடுத்தாச்சாம் இனி சுயேட்சையென்ன கட்சியென்ன எல்லாம் ஒன்றுதான்! வெளிநாட்டுக்காரனுக்கு தேர்தல் நடந்தா சரி. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்! :-) தேர்தல் முடியட்டும்! (கிழக்கு மாகாண சபையில் இன்னும் கூட்டமைப்பு இருக்கினம் ஞாபகம் இருக்க்கட்டும்)

எந்த சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என்பதல்ல முக்கியம் எதற்காக,எந்த அரசியல் அமைப்பின்கீழ் போட்டியிடுகின்றோம் என்பதே! இதே மாதிரித்தான் பாராளுமன்ற உள்ளுராட்சி தேர்தல்களிலும் சொன்னார்கள் இறுதியாக கிழக்கிலும் சொன்னார்கள் நடந்தது என்ன? இப்போதுள்ள கேள்வி அதுவல்ல எமது உண்மையான இறுதி நோக்கு என்ன வென்பதே! எந்தவழியிலாயினும் மக்கள் இந்த நோக்குடையவர்களின் பின் உள்ளார்கள் என்று காட்டவேண்டும்.அதனை எவரும் சரியாக செய்வதாக படவில்லை இந்த இடத்தில் இலுப்பம்பூ சர்க்கரையாக கூட்டமைப்பு இருந்து காலத்தை ஓட்டுகிறது அவ்வளவுதான்

தேர்தல் ஊடாக அரசியல்போராட்டம் இது தான் காலம் காலமாக நடைபெறுகிறது. இதில் பெரிய மாற்றம் இல்லை.அப்போது பக்கபலமாக ஆயுதப்போராட்டம் இருந்தது இப்போது அது இல்லை.வெளிநாட்டுக்காரன் வருவான் காப்பாத்துவான் என்பது ஒரு ஆசை அது இப்போது அதட்டலுடன் வேட்பாளராக ஆளை க்காட்டுவதுடன் முடிவுறுகிறது.அவனுக்கு ஆதாயம் கிடைக்கும் வரை ஆட்டுவான்எ நமது தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் மேடையில் விரலை ஆட்டுவார்கள் நாம் .... எல்லாம் ஒரு காலத்துக்குதான் பார்ப்போம். மீண்டு்ம் சொல்கின்றேன் விக்கிரமாதி்த்தனாக....தமிழர்கள் பலத்துடன் இருக்கவேண்டும் ஆகவே வெல்ல வேண்டும் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில்).