வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

படம்: ராமன் தேடிய சீதை
பாடல்: இப்பவே இப்பவே
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

பெண்:
ம்….ம்…..ம்….ம்…..

ஆண்:
கண்ணை மூடி உன்னைக் கண்டால்
அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால்
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே……….

வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால்
என்ன செய்வது

பெண்:
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

ஆண்:
சொல்லித் தீரா
இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு
கூத்தாட…

பெண்:
மின்னல் கண்ட
தாழை போல
உன்னால் நானும்
பூத்தாட…..

ஆண்:
உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம்
என்னைக் காண
உன்னை நானும்

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே…..

ஆண்:
எந்தன் வாழ்வில் வந்ததின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே
செல்ல விருப்பம்

பெண்:
நெஞ்ச வயல் எங்கும் உன்னை
நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம்
இட்டு வைக்கிறேன்

ஆண்:
உன்னைக் காண
நானும் வந்தால்
சாலை எல்லாம்
பூஞ்சோலை….

பெண்:
உன்னை நீங்கி
போகும் நேரம்
சோலை கூட
தார்ப்பாலை…

ஆண்:
மண்ணுக்குள்ளே
வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெண்:
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ஆண்:
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

பெண்:
கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே

ஆண்:
கைவளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே

பெண்:
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

0 comments

கருத்துரையிடுக