ஒரு சிறிய விடயத்தினை பெரிதாக்குவதன்காரணமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன.ஆறுதலாக இருந்து சிந்தித்தால் எமக்கு அது வெட்கமானதாக இருக்கும்.ஐயோ இதற்கா இவ்வளவு ஆரவாரப்பட்டோம் என்று எண்ணுவோம். அனைத்தையும் இலகுவானதாக எடுத்தோமானால் பிரச்சனை என்பதே இல்லாமல் இருக்கும். எந்த ஒன்றுக்கும் தீர்வு இல்லாமல் இல்லை.அந்த வேளையில் அவா் அப்படி நினைத்திருப்பாரோ அல்லது இப்படி நினைத்திருப்பாரோ என பலவாறாக நினைத்து நாம் குழம்பிக்கொண்டிருப்போம் ஆனால் அவா் ஒன்றும் நினைத்திருக்கவே மாட்டார். எவா் எப்படி நினைத்தால் என்ன நமக்கு இது பிழை என்று உணரமுடிந்தால் அதனை எதிர்காலத்தில் செய்யாது தவிர்ப்போம் .ஏன் அப்படி செய்தாய் என்று கேட்பதை விட செய்தமையால் பாதிப்புற்றவரை சரிசெய்வதே மேல். விபத்து நடந்தால் விபத்துக்குள்ளானவரை முதலில் காப்பாற்ற வேண்டும்
0 comments